Tamilnadu

News April 29, 2024

முண்டந்துறை: வரையாடு கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

image

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டம் முண்டந்துறை வனச்சரக பகுதிகளில் இன்று வரையாடு கணக்கெடுக்கும் பணி வனச்சரகர் கல்யாணி தலைமையில் தொடங்கப்பட்டது. இந்தப் பணியானது ஐந்தலைப் பொதிகை, அடுப்புகள் மொட்டை, அகத்தியர் மலை, செம்பூஞ்சி மொட்டை ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த பணி முடிவடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 29, 2024

குமரி: பத்மநாபபுரம் அரண்மனையின் சிறப்பு

image

தக்கலை அருகே பத்மநாதபுரம் என்னும் ஊரில் கிபி.1601 இல் வர்மா குலசேகரபெருமாள் என்ற மன்னரால் கட்டப்பட்டது. திருவாங்கூர் மன்னர்களின் உறைவிடமாக இந்த அரண்மனை திகழ்ந்தது. கி.பி. 1795 வரை பத்மநாபபுரம் திருவாங்கூரின் தலைநகரமாக திகழ்ந்தது. இந்த அரண்மனை வளாகம் 185 ஏக்கரில் மேற்கு தொடா்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள வேலி மலையில் உள்ளது. இந்த அரண்மனை கேரள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

News April 29, 2024

வாகங்கள் தடுத்து நிறுத்தம்

image

மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கொடக்கானலுக்கு இன்று முதல்வர் வருவதையொட்டி தேனி மாவட்ட எல்லையான காட்ரோடு பகுதியில் வகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சற்று முன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

News April 29, 2024

வேலூரில் இலவச பொது மருத்துவ முகாம்

image

வேலூர் மாநகர் பெரிய அல்லாபுரத்தில் திவ்யா கிளினிக்கில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு மருத்துவர் அனிதா, பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் இரத்த அழுத்தம், எலும்பு உறுதி தன்மை (BMD), உடல் பருமன் ஆகிய பரிசோதனைகள் இலவசமாக செய்யபட்டன. இந்த முகாமில், சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பலனடைந்தனர்.

News April 29, 2024

கோடை கால பயிற்சி முகாம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜோலார்பேட்டை அரசு மினி ஸ்டேடியத்தில் ரூ. 200 கட்டணத்தில் இன்று முதல் மே.13 ஆம் தேதி வரை கோடை கால பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் தடகளம்,கபடி,கூடைப்பந்து,கால்பந்து மற்றும் கையுந்து விளையாட்டிற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 7401703463 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News April 29, 2024

சென்னை: நடிகை மீது போலீசில் புகார்

image

சுந்தரா டிராவல்ஸ் படத்தின் கதாநாயகி நடிகை ராதா மீது மீண்டும் போலீசில் நேற்று(ஏப்.28) புகார் அளிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முரளி என்பவரை தாக்கியதாக, ராதா மீது சென்னையில் வழக்கு பதிந்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் பிரான்சிஸ் என்ற இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருண் மீதும் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 29, 2024

தஞ்சாவூர்: என்ஜினீயரிங் மாணவருக்கு கத்திக்குத்து

image

தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில், மாத்தூர் கிராமத்தில் நேற்று இளைஞர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியின்போது சாம்சன் ராஜ்(22) என்ற தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்தர்(25) ஆகிய 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சுரேந்தர் கத்தியால் சாம்சன் ராஜை குத்தினார். புகாரின் பேரில் சுரேந்தரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 29, 2024

முதுமலை புலிகள் காப்பகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு

image

முதுமலையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் தாவரங்கள் உதிர்ந்து வனப்பகுதி பசுமை இழந்து காணப்படுகிறது. வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் உணவு, குடிநீருக்காக இடம் பெயர்ந்துள்ளன. வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வனத்துறையினர் மாயார் ஆற்றிலிருந்து வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்து வந்து தொட்டிகளில் நிரப்புகின்றனர்.

News April 29, 2024

திருச்சி அருகே விபத்து; மரணம் 

image

திருச்சி பொன்மலை பட்டியை சேர்ந்த எபினனேசர் (27) நேற்று கருமண்டபத்திலிருந்து பஸ் நிலையம் நோக்கி பைக்கில் வந்தார் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதியது. பலத்த காயமடைந்த எபினேசரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி எபினேசர் நேற்று இரவு இறந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 29, 2024

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கடற்கரையில் குவிந்த மக்கள்

image

தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி இந்நிலையில் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் நேற்று மாலையில் கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து பொழுதை கழித்தனர்.

error: Content is protected !!