India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனைகளை படைக்க பயிற்சி, தங்குமிடம், சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் உள்ளது. இதில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான தேர்வு போட்டி நடைபெற உள்ளது. மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையம் 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என தேனி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஊட்டியில் இருந்து 70கி.மீ தொலைவில் உள்ளது. 688.59 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் 65 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இந்தியாவில் காணப்படும் பறவை இனங்களில் எட்டு சதவீதம் முதுமலையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு புலி, யானை, சிறுத்தை, புள்ளிமான், குரைக்கும் மான் போன்ற விலங்குகள் இங்கு உள்ளன. இங்கு சில சாலைகளில் பயணத்தை மேற்கொள்ள சில நேரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
நீலகிரி எம்பி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் நேற்று மாலை ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது: கேமராக்கள் செயல் இழந்துவிட்டன. அதிக வெப்பம் காரணமாக சூடானதால் இந்த பிரச்சனை ஏற்பட்டது என தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது நம்பும்படியாக இல்லை, சரியான விளக்கம் கிடைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று (ஏப்.29) பள்ளி மாணவர்களுக்கு கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் தொடங்கியது. இந்த பயிற்சி முகாமானது வருகின்ற மே 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஹாக்கி, ஜிம்னாஸ்டிக், தடகளம் உள்ளிட்ட போட்டிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கூட இதுவரை இல்லாத வகையில் வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஊட்டியில் நேற்று 84.2 டிகிரி (29 செல்சியஸ்) வெயில் பதிவானது. அதாவது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 1969, 1986, 1993, 1995, 1996 ஆகிய ஆண்டுகளில் 80.6 டிகிரி முதல் 83.3 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது.
திருவண்ணாமலை சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலைக்கு மே 2 ஆம் தேதி முதல் தினசரி ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில் நேர பட்டியலையும் மற்றும் பயணக் கட்டணமாக ரூ.50 நிர்ணயித்து தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வரும் சென்னை நகரத்து பக்தர்கள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழக முழுவதும் கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழக அரசு உத்தேசித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 2299 பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 77 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் பலர் தேர்வுக்கு ஆர்வாமாக தயாராகி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் வெப்பத்தினால் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சில பகுதிகளில் மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஏப்.29) காலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் மொத்தமாக மாவட்டத்தில் 9 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தாளமுத்து நகர் போலீசார் நேற்று மாதா நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் வசந்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று (ஏப்.28) இரவு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னதாக மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாணவிகளின் பரத நாட்டியத்தை கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Sorry, no posts matched your criteria.