India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்ட (கள்ளக்குறிச்சி உள்பட) நீதித்துறையில் 124 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில், மேல்நிலை வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுவந்தது. மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணியானது இன்றுடன் நிறைவுபெற்றது. கடந்த வாரம் முதன்மை பாட தாள்கள் திருத்தும் பணி நிறைவுபெற்ற நிலையில் இன்று தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணியும் நிறைவுபெற்றுள்ளது.
மதுரை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு செய்யபட்ட வாக்குப்பெட்டிகள் மதுரை மருத்துவ கல்லூரி வளாக வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 04.06.2024 அன்று வரை வாக்கு எண்ணும் மையம் உள்ள பகுதிகளில் சுமார் 2 கிமீ சுற்றளவிற்கு ஆளில்லா ட்ரோன் விமானங்கள் பறக்க விட தடை விதித்து ஆட்சியர் சங்கீதா அதிரடி உத்தரவிட்டுள்ளார். மீறினால் கடும் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை.
மன்னார்குடி ஒன்றியம் ராமபுரம் ஊராட்சி வாஞ்சூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, நகர செயலாளர் வீரா கணேசன், ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். திட்ட இயக்குநர் லோகநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சுதா, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பற்குணம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோடை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்.29) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் (7 மணி வரை) சிவகங்கையில், இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது மதுரை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்.29) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் (7 மணி வரை) மதுரையில், இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி செல்போனில் பேசியதாக – கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக 2018-ல் தொடரப்பட்ட வழக்கில் முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் பேராசிரியை நிர்மலா தேவி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது இதையடுத்து பேராசிரியை நிர்மலா தேவிக்கு தண்டனை விவரங்கள் நாளை வெளியாகும் என ஸ்ரீவி மகளிர் நீதிமன்றம் அறிவித்தது.
கோடை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்.29) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் (7 மணி வரை) நெல்லையில், இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் 1.06 லட்சம் செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் இருப்பதாக
கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு கால்நடை நலம் மற்றம் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக 1.43 லட்சம் மருந்துகள் வரவழைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டு 30 நாட்களுக்கு இப்பணிமேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.