Tamilnadu

News April 30, 2024

அரக்கோணம்: பைக்குகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் காயம்

image

அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமம் மின்னல் பங்களா என்ற இடத்தில் இன்று(ஏப்.30) காலை 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆனந்தன், சேட்டு ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 30, 2024

காஞ்சி அருகே திருநங்கை தற்கொலை?

image

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பெருநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாசிலாமணி என்ற திருநங்கை, நேற்று(ஏப்.29) அதே பகுதியில் உள்ள தைலம் தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த பெருநகர் காவல் நிலைய காவலர்கள் பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலையா அல்லது தற்கொலையா என்ற கோலத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 30, 2024

கடலூர்:கார் மீது பைக் மோதியதில் தகராறு; 2 பேர் மீது வழக்கு!

image

கடலூர் முதுநகரை சேர்ந்தவர் கந்தன்.இவர் முதுநகரில் இருந்து கடலூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.சிவானந்தபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அங்கு நிறுத்தி இருந்த பரணி முருகனின் காரின் பின்பகுதியில் கந்தன் ஓட்டி வந்த பைக் மோதியது.இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் முதுநகர் போலீசார் கந்தன், பரணி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

News April 30, 2024

ஒ.எஸ்.மணியன் பகீர் குற்றச்சாட்டு

image

கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளால் வேதாரண்யம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் பாபநாசம் வலங்கைமான், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைபூண்டி வழியாக தலைஞாயிறு வேதாரண்யம் பகுதிக்கு வருகிறது. இந்த வழித்தடங்களில் குடிநீர் முறைகேடாக பல ஊர்களில் எடுக்கப்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க ஒ.எஸ்.மணியன் கேட்டு கொண்டுள்ளார்.

News April 30, 2024

கோயம்பேடு அருகே கொலையாளி கைது!

image

கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பொன்மாலா, அவரது வீட்டில் வாடகைக்கு இருந்த வெங்கடேசனுடன்(36) தனிமையில் இருந்துள்ளார். இதனை பொன்மாலாவின் கணவர் துரைப்பாண்டியன்(52) கையும் களவுமாக பிடிக்கவே, அவரை வெங்கடேசன் மாடியில் இருந்து தள்ளி கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடினார். இந்நிலையில், போலீஸ் விசாரணையில் கொலை செய்தது உண்மை என தெரியவர இன்று வெங்கடேசனை கைது செய்தனர்.

News April 30, 2024

பொது மக்களுக்கு இடையூறாக இருந்த நிழல் கூடம் இடிக்கப்பட்டது

image

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலை, ஜீவா செட் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக நிழல் கூடம் அமைக்கப்பட்டது. இது பொது மக்களுக்கு இடையூறாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் ,இதை அகற்ற வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு நெடுஞ்சாலை துறையினர், நிழற்குடைத்தை முழுமையாக இடித்து தகர்த்தனர்.

News April 30, 2024

கரூர்: செம்மண் கடத்தல் – லாரி பறிமுதல்

image

கரூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் காவிரி ஆற்றில் இருந்து வெளியே வரும் பாதையில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன் வாகன சோதனையில் இன்று ஈடுபட்டிருந்தார் . அப்போது ஒரு யூனிட் ஆற்று மணலுடன் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்துபோது அனுமதி இல்லாமல் கொண்டு வந்தது தெரிய வந்தது. தாசில்தார் அளித்த புகாரின் பேரில் ஒரு யூனிட் செம்மனுடன் லாரி பறிமுதல் செய்துள்ளனர். மாயனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 30, 2024

பஜாஜ் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

image

புதுச்சேரி செட்டி வீதியில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் பிரபல ரவுடிகளை கையில் வைத்துக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் போல் தொலைபேசியில் கடனாளிகளை மிரட்டும் பஜாஜ் நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரி சமூக அமைப்புகளுடன் சட்டமன்றத் உறுப்பினர் நேரு தலைமையில் பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகம் முன்பு இன்று போராட்டம் நடைபெற்றது.

News April 30, 2024

ரயில்வே ஊழியருக்கு கத்திக்குத்து- சிறுவன் கைது

image

மதுரை ரயில்நிலையத்தில் நேற்று நண்பகலில் திண்டுக்கல் – நெல்லை ரயில் பெட்டியில் கார்டராக இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ராக்கி(28) என்ற பெண் அதிகாரியிடம் ரயில் பெட்டியில் ஏறி கத்தியால் தலையில் தாக்கி செல்போன் மற்றும் 500 ரூபாயை கொள்ளையடித்த வழக்கில் செல்லூர் பகுதியை சேர்ந்த சிறுவனை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பிய மற்றொருவரை போலீசார் தேடுகின்றனர்.

News April 30, 2024

திருநெல்வேலி மழைப்பொழிவு விவரம்

image

கோடை வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று நெல்லை மாவட்டத்தில் மழை பெய்தது. திருநெல்வேலியின் மழைபொழிவு அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மாஞ்சோலையில் 3 செ.மீட்டரும், காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும், ஊத்து பகுதியில் ஒரு சென்டி மீட்டரும் மழைபொழிவு பதிவானது.

error: Content is protected !!