India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு, வாக்குகளை பிரித்து அனுப்பும் பணியில் தீவிரம் அடைந்துள்ளனர்.
2024ஆம் ஆண்டிற்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ராமநாதபுரத்தில் வரும் மே 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ரூ.300 கட்டணத்தில்
தடகளம், ஹாக்கி, டென்னிஸ், இறகுப்பந்து, ஜுடோ ஆகிய பயிற்சி அளிக்கப்படும். 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்க மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட மக்களின் ஊட்டி, கொடைக்கானலாக உள்ளது காஞ்சனகிரி மலை. இதில் சிறிய மற்றும் பெரிய அளவில் இரண்டு மலைகள் உள்ளது. இதில் ரத்னகிரி பாலமுருகன் கோவிலும், காஞ்சனேஸ்வரர் சிவன் கோவிலும் உள்ளது. மலையை சுற்றிலும் ஆங்கங்கு காவல் தெய்வங்களும் உள்ளன. அழகிய அமைதியான இடத்தில் நேரம் செலவிடுவதற்கு இவ்விடம் சிறந்தது.
வேடசந்தூரனபாலபட்டியைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவர் தன்னிடம் விலை உயர்ந்த ரத்தினங்கள் இருப்பதாக கூறி திருப்பூர் காளியப்பன்னை அய்யலூர் வரவழைத்து ரூ.1.20 லட்சம் பெற்றுக் கொண்டு ரத்தினகல்லை கொடுத்துள்ளார். அது போலி கல் என்பதை தெரிந்த காளியப்பன் பணத்தை திரும்ப பெற்றுள்ளார்.முதல் தவணையாக ரூ.28,000 கொடுத்த நிலையில் மீதி பணத்தை தர மறுத்து விட்டார்.இது குறித்து வடமதுரை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையில் சாலைப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. விபத்து பகுதிகளை கண்டறிந்து விழிப்புணர்வு பலகை வைக்க அறிவுறுத்தினார். பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர், உதவி எஸ்பி சிவராமன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முஹமது உடன் உள்ளனர்.
முத்துப்பேட்டை ஒன்றியம் கற்பகநாதர்குளம் பகுதியில் உள்ளஸ்ரீ நல்லமாணிக்கர்
சாமிகள்மிகவும் பிரசித்தி பெற்றது இக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கிடா வெட்டு நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இதில் இரண்டாயித்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் அருகே தனியார் பேருந்தும் ஈச்சர் லாரியும் இன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை உடனடியாக வழங்க வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் பூங்கா காலனியை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய வீட்டில் நேற்று மாலை கேஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றியது. பின்னர் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் குடிசை வீடு தீப்பற்றியது. உடனடியாக தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடிசை எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை பகுதியை சேர்ந்த ரமேஷ்(50). இவருக்கு மணிகண்டன்(28) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன், ரமேஷ் இடையே ஏப்.28ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக் கொண்ட நிலையில், இரவு 1 மணியளவில் மணிகண்டன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து ரமேஷை நேற்று(ஏப்.29) அதிராம்பட்டினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி தென்னக ரயில்வே நிர்வாக கோட்டம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருச்சி உத்தமர்கோவில் ரயில் நிறுத்தத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால்,திருச்சி– திருப்பாதிரிப்புலியூர் டெமு ரயில், திருச்சி-விருத்தாசலம் டெமு சிறப்பு ரயில்கள் (29.04.2024) முதல் 01.05.2024 வரை 3 நாட்கள் உத்தமர்கோவில் ரயில் நிறுத்தத்தில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.