India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் பைக்கில் ஹெல்மெட் இல்லாதது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, அதிக ஒலி எழுப்பியது, மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் என கடந்த 5 நாட்களில் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 1,107 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டியதாக 306 பேர் மீது வழக்கு பதிவானது . சில வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டன. – என போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, கிருஷ்ணகிரி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
18ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது. திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 8.30 மணிக்கு தொடங்கும்.
கடலூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்க உள்ளது. இந்த நிலையில் கடலூர் தொகுதியில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டு எண்ணும் அறையிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு மேஜையிலும் 1 மேற்பார்வையாளர், 2 உதவியாளர்கள் மற்றும் 1 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 56 அலுவலர்கள் பணியில் ஈடுபடுவர் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:கன்னியாகுமரி சங்கமங்களின் பூமி.நம்
நாட்டின் புனிதநதிகள்
வெவ்வேறு கடல்களில்
பாய்கின்றன.இங்கே அந்த கடல்கள் சங்கமிக்கின்றன.பாரதத்தின் கருத்தியல் சங்கமமாக கன்னியாகுமரி விளங்குகிறது.இங்கே விவேகானந்
தர் நினைவகம், வள்ளுவரின் சிலை,காந்திமண்டபம்,காமராஜர் மணி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம்.இந்த சிந்தனை ஓட்டங்கள் தேசிய சிந்தனையின்
சங்கமமாக இங்கு ஒன்றுபடுகின்றன.
கடலூரில் லோக்சபா தேர்தல் (ஏப்.19) முடிந்து வாக்குப்பெட்டிகள் கடலூர், தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 8.30 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கப்படும். தொடர்ந்து கடலூர் மற்றும் நெய்வேலி தலா 17, விருத்தாசலம் 21, பண்ருட்டி 19, திட்டக்குடி 18 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையத்தில் ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் காருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காருக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் அலுவலரிடம் டி.ஆர்.பாலு முறையிட்டுள்ளார். சற்று நேரத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ள நிலையில், இச்சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. பொதுவாக, வாக்கு மையத்திற்கு 100 மீட்டருக்கு முன்பே வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையத்தில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் மேற்பார்வையில் சீல் அகற்றப்பட்டது.மேலும் கடலூர் நாடாளுமன்ற வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் காலையிலிருந்து கூட்டமாக செல்கின்றனர்
கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதனிடையே இந்த நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்றார். அதனை தொடர்ந்து சிறப்புரையாற்றினார். இதில் திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு அறைகளில் வைக்கப்பட்ட சீல் மற்றும் அறைகளை ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் சுஷாந்த் கௌரவ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலையில் சீல்கள் உடைக்கப்பட்டு வாக்கு பதிவு இயந்திர அறைகளை தற்போது திறக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.