Tamilnadu

News April 30, 2024

அவரக்கொட்டை களி கிண்டி வழிபாடு

image

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த கஞ்சமலை சித்தர் கோயிலில் இன்று அதிகாலையில் இருந்து, சித்தர் சிறப்பை கொண்டாடும் வகையில் சேலம் சுற்றுப்புற பகுதியில் இருந்து விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விளைந்த தேங்காய், ராகி, அவரை, வெல்லம் உள்ளிட்டவை கொண்டு அவரக்கொட்டை களி கிண்டி, சாமிக்கு படையில் இட்டு வழிபட்டனர். வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் காலையிலேயே ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

News April 30, 2024

உரிமைகளை வென்றெடுத்த வெற்றி நாள் – எம்பி

image

கன்னியாகுமரி எம்.பி. விஜய்வசந்த் மே தின  வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,  “உழைக்கும் மக்களின் பெருமையை எடுத்துக் கூறும் இந்த மே தினத்தில் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்; தங்கள் உடலை வருத்தி உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள் தங்கள் உரிமைகளை வென்றெடுத்த வெற்றி நாள் இது; தேசத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தொழிலாளர்கள் போற்ற பட வேண்டியவர்கள்” என்றார்.

News April 30, 2024

காஞ்சி: நீர், மோர் வழங்கிய போக்குவரத்து காவலர்கள்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மூங்கில் மண்டபம் போக்குவரத்து சிக்னல் அருகே கோடைக்காலத்தில், வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் சிங்கனலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்களுக்கு நீர், மோர் வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்களும் நீர், மோர் வாங்கி அருந்தி வருகின்றனர்.

News April 30, 2024

சென்னை: தயார் நிலையில் சுகாதார மையங்கள்!

image

சென்னையில் நிலவும் கடுமையான வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அவசர சிகிச்சை அளிக்க நகரில் உள்ள 140 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ‘ஹீட் ஸ்ட்ரோக்’ ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக நகர் முழுவதும் வழிகாட்டி பலகைகள் வைத்துள்ளதாகவும், குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார் .

News April 30, 2024

வேலூரில் தொடர்ந்து அதிகரித்தது வரும் வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் தினமும் 100° F வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடைகள் பிடித்தபடியும், முகத்தை துணியால் மறைத்துக் கொண்டும் வெளியில் சென்று வருகின்றனர். மேலும் நீர் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் ஜூஸ் மற்றும் மோர் வாங்கி பருகி வருகின்றனர்.

News April 30, 2024

திருவள்ளூர்: 130 ரவுடிகள் அதிரடியாக கைது

image

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட ஆவடி, செங்குன்றம் காவல் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை நடைபெற்ற ரவுடி வேட்டையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் தொடர்புடைய 130 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து காவல் ஆணையர் கி.சங்கர் கூறியதாவது, ரவுடிகள் மீதான கடும் நடவடிக்கைகள் தொடரும் என்றார்.

News April 30, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் விளையாட்டு பயிற்சிகள்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டரங்கில் நேற்று முதல் மே 13ஆம் தேதி வரை கோடை கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். தடகளம், கபடி, கைப்பந்து, மல்லர்கம்பம், வாலிபால் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுவதாக ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

தமிழறிஞருக்கு மாநகராட்சி மேயர் மரியாதை

image

தமிழறிஞர் கா.சு.பிள்ளை 79வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (ஏப்.30) திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் நினைவு ஸ்தூபிக்கு மாநகராட்சி மேயர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேரன் சுப்பிரமணியன், பேத்தி அழகம்மாள் மற்றும் குடும்பத்தினர், கவிஞர்கள் கலந்து கொண்டனர்.

News April 30, 2024

திருவள்ளூர்: திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

image

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பேருந்து நிலையம் அருகில் இன்று திருவள்ளூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் ஏற்பாட்டில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, ஆரஞ்சு, மோர் உட்பட பல்வேறு உணவுப்பொருட்களை ஆவடி எம்எல்ஏ நாசர் வழங்கினார்.

News April 30, 2024

நகராட்சி மார்க்கெட் கடைகளுக்கு விடுமுறை

image

ஊட்டி அனைத்து வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ள தகவல்: மதுரையில் 41வது வணிகர் மாநாடு மற்றும் பேரணி மே 5ஆம் தேதி நடைபெறுகிறது. அறைய தினம்  உதகை மார்க்கெட் கடைகளுக்கு காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை விடுமுறை விடப்படுகிறது. மேலும் 4ஆம் தேதி இரவு 10 மணி வரை கடைகள்  திறந்திருக்கும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

error: Content is protected !!