India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எம்ஜிஆர் குரூப் ஆஃப் கம்பெனி சார்பில் பாளையங்கோட்டையில் வைத்து வரவேற்பு விழா மற்றும் சிறந்த சமையல் குழுவிற்கு பாராட்டு விழா நேற்று (ஏப்.30) நடைபெற்றது. எம்ஜிஆர் குரூப் ஆப் கம்பெனி நிறுவனர் கோவிந்தராஜன் கலந்துகொண்டு மேலப்பாளையத்தை சேர்ந்த நண்பர்கள் சமையல் கேட்டரில் குழுவிற்கு முதல் பரிசாக தங்க மோதிரம் வழங்கி பாராட்டினார்.
தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாங்கினாராம். கடன் வாங்கி தராமல் தான் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு நேற்று பவர்ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி வழக்கினை வரும் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பள்ளிப்பட்டு அடுத்த பொம்மராஜபேட்டையில் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதில், அர்ச்சுனன் வில் வளைப்பு, திரவுபதியம்மன் திருக்கல்யாணம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடந்து வருகின்றன. திருவிழாவின் 18ம் நாளான நேற்று முன்தினம் காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அருணா விடுத்துள்ள செய்தியில், ‘வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதை தணிக்க, அதிக தண்ணீர் குடியுங்கள், வெயிலில் பயிற்சி வேண்டாம், காலை 11 முதல் 3.30 வரை சூரிய வெளிச்சத்தில் நிற்காதீர், மது குடிக்காதீர், பழம், காய்கறி சாப்பிடுங்கள், லேசான உணவை எடுத்து கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தி உள்ளார்.
சேலம், ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 30) அதிகபட்ச வெயிலாக 106.9°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது குடை, தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சேலம், ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் எம்எல்ஏ ராஜேந்திரன், டீன் டாக்டர் மணியை சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் இன்று சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா முகாமிற்கு தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் வி. கங்காபுர்வாலா, மகாதேவன் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் குடும்ப பிரச்சினைகள், நில அபகரிப்பு, சீட்டு மோசடி குறித்து நிவாரணம் வேண்டி நீதிபதிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வாணியம்பாடி அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கிரி சமுத்திரம் பகுதியில் சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புல்டோசர் எந்திரத்தின் மீது 45 பயணிகளுடன் திருப்பத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியதில் 8 பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே திருப்பதியில் இருந்து பெங்களூரு வரை செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ஏசி கோச் ஏர் பைப் கட்டானதால் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டது. இன்று மாலை ஆறு மணிக்கு பழுதடைந்த காரணத்தினால் ரயில் பெட்டியில் பயணம் செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.