Tamilnadu

News May 1, 2024

ரூ.3.69 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்!

image

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று ரூ.3.69 லட்சத்துக்கு தேங்காய், மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. மட்டையுடன் கூடிய தேங்காய்கள் ரூ. 2,11,867-க்கு விற்பனையாகியுள்ளது. கொப்பரை தேங்காய்கள் ரூ. 1,57,149-க்கு விற்பனையாயுள்ளது . இதில் 16 விவசாயிகள், 8 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.

News May 1, 2024

ஒரே கடையில் 80 கிலோ நெகிழி பறிமுதல்

image

செங்கம் தனியார் மண்டப வாடகை வணிகத்தில் சுமார் ரூ.10,000 மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 80 கிலோ நெகிழி பிளாஸ்டிக் பைகளை மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் பிரேம்குமார், தேர்வுநிலை பேரூராட்சி ஆய்வாளர் சொக்கநாதன் மற்றும் பணியாளர்கள் நேற்று அதிரடியாக பறிமுதல் செய்து ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

News May 1, 2024

கொடைக்கானலுக்கு செல்ல தடை

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனச்சரகத்திற்குட்பட்ட பூம்பாறை, மன்னவனூர் பகுதிகளில் காட்டுத்தீ தொடர்வதால், பூம்பாறையில் இருந்து கூக்கல், மன்னவனூர் செல்லும் கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்
உள்ளூர் மக்களுக்கு தடை இல்லை. இந்த தடை இன்று மற்றும் நாளை அமலில் இருக்கும் என மாவட்ட வன அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

கோர விபத்தில் 4 பேர் பலி

image

கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவர் மனைவி ரஞ்சிதா,மகன் அபிஷேக், மகள் நித்திஷா ஆகியோருடன் கரூர் சென்று விட்டு நேற்று இரவு மீண்டும் சிறுமுகை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சத்தியமங்கலம் அடுத்த நெசவாளர் காலனி அருகே வந்த போது சத்தியமங்கலம் நோக்கி வந்த கார் நேருக்கு நேர் மோதியது. இதில் முருகன் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News May 1, 2024

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை

image

தென்காசி மாவட்டத்தில் வழக்கத்தைக் காட்டிலும் நிகழாண்டில் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று பிற்பகலில் தென்காசி, மேலகரம், குற்றாலம், இலஞ்சி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 15 நிமிடங்கள் கனமழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனா்.

News May 1, 2024

கடலூர் போலீசார் முக்கிய அறிவிப்பு

image

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார் அளிக்க 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று தெரிவித்துள்ளனர்.

News May 1, 2024

கரூர் மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

image

கரூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு காவேரி ஆற்றில் தென்மேற்கு பருவமழை குறைந்த காரணமாக நிலத்தடி நீர் மிகுந்த ஆழத்திற்கு சென்று விட்டதால் ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் நீரின் அளவும் குறைந்து விட்டது. எனவே பொதுமக்கள் வருகின்ற பருவ மழை பொழிந்து ஆற்றில் போதுமான நீர் வரத்து வரும் வரை ஆழ்துளை கிணறு மூலம் பெறப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News May 1, 2024

நீர் மோர் வழங்கிய மாநகராட்சி ஆணையர்

image

கோவை மாநகரில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இந்த வெயில் காலத்தில் பயனடையும் விதமாக மாநகரின் 5 மண்டலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் மொத்தம் 100 இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகளை அமைத்துள்ளனர். இந்த தொட்டிகள் ஒவ்வொன்றும் மொத்தம் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்டவை. இதை தவிர நீர் மோர் பந்தல்களும் துவங்கப்பட்டுள்ளது. இன்று நீர் மோரை ஆணையர் வழங்கினார்.

News May 1, 2024

அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில், செம்மண் குவாரியில் விதிகளை மீறி அதிக அளவில் செம்மண் அள்ளியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி எம்பி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்.30) நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து வழக்கினை வரும் ஜூன் 3ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News May 1, 2024

வேலூரில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

image

வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் சீனிவாசன்  தலைமையிலான போலீசார் நேற்று (ஏப்ரல் 30) வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சோதனை மேற்கொண்டனர்.
அங்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பொட்டுலு வெங்கடேஷ் என்பவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 30,000 ரூபாய் மதிப்புடைய 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!