India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் பகுதியில் இன்று காலை அல்லிநகரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகுளம் அருகே வடுகப்பட்டியைச் சேர்ந்த தெய்வேந்திரன் (37) அரசு அனுமதியின்றி ரூ. ஒரு லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 900 மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 900 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள திரையரங்குகளில் ‘பில்லா’ திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘பில்லா’ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று உழைப்பாளர் தின விடுமுறை என்பதால் காலை முதல் அஜீத் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்துள்ளனர். பேனருக்கு மாலை அணிவித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
காரியாபட்டி, ஆவியூர் கல்குவாரியில் இன்று இறக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதில் வெடிபொருள் கொண்டு வரப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர் கந்தசாமி, துரை, குருசாமி, என்ற 3 பேர் உயிரிழந்தனர். அதில் இருவர் ராஜபாளையம் எனவும், மற்றொருவர் மதுரை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. வெடிபொருட்கள் முழுமையாக வெடிக்காமல் சிதறி கிடப்பதால் மீண்டும் வெடிக்கக்கூடும் என்பதால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பதை தெரிவிக்க திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அலுவலகம் சார்பில் இன்று (மே 1) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொடர்பு எண் வெளியிட்டுள்ளனர். அதில் திருநெல்வேலி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் (83000 70283), காவல் ஆய்வாளர் (94981 20504), சார்பு ஆய்வாளர் (94981 95193) ஆகியோரை கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் -30) விருத்தாசலம் 41 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 41 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 40 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோவில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 40 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது
ஆவியூர் அருகே உள்ள கடம்பன்குளம் ஊராட்சியில் சேது என்பவருக்கு சொந்தமான குவாரியில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு உடல்கள் சிதறி கிடக்கின்றன. வெடி மருந்துகள் இன்னும் முழுமையாக வெடித்து சிதறாததால் மீண்டும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அப்பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று வெளியிட்ட செய்தியில், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்து அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். விபத்தில் உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அனுதாங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் பலியானவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
காரியாபட்டி ஆவியூர் அருகே உள்ள கடம்பன்குளம் ஊராட்சியில் சேது என்பவருக்கு சொந்தமான குவாரியில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி மருந்துகள் இன்னும் அங்கேயே இருப்பதால் மீண்டும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளட்தாக தீயணைப்பு துறையுனர் தெரிவித்தனர்.
ஆனைமலை காளியாபுரம் மாட்டேகவுண்டன் கோவில் பிரிவு வழியாக, வெப்பரை , காக்கா கொத்திபாறை ஆகிய பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இருசக்கர வாகனம், சரக்கு ஆட்டோக்களில் சென்று வருகின்றனர்.
இப்பாதையில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, இந்த பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்துள்ளனர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் முன்பு ஒன்றாவது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சரிவர குடிதண்ணீர் வரவில்லை என குற்றம் சாட்டி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை காட்டினர். இதில் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.