India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவைத் தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 72.28% வாக்குகள் பதிவாகி உள்ளது. இத்தொகுதியில் வேட்பாளராக திமுக சார்பில் விஷ்னு பிரசாத்(காங்.), அதிமுக சார்பில் சிவக்கொழுந்து(தேமுதிக), பாஜக சார்பில் தங்கர் பச்சானும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளது. இத்தொகுதியில் வேட்பாளராக திமுக சார்பில் தயாநிதிமாறன், அதிமுக சார்பில் பார்த்தசாரதி, பாஜக சார்பில் வினோஜ் செல்வம் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
நாகர்கோவில் கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள்- அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. படிவம் 18 கொண்டுவரவில்லை எனக்கூறி முகவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், விரைந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி படிவம் இல்லை என்றாலும் உள்ளே அனுமதிக்க அனுமதித்தனர். பின், பல்வேறு சோதனைகளுக்கு பின் வாக்கு மையத்திற்குள் முகவர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
2024 மக்களவைத் தேர்தலில் வட சென்னை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளது. இத்தொகுதியில் வேட்பாளராக திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் மனோ, பாஜக சார்பில் பால் கனகராஜ் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் மொத்தம் 54.27% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்தன், நாம் தமிழர் சார்பில் சு.தமிழ் செல்வி, பாஜக சார்பில் தமிழிசை சௌந்தராஜன் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலை.யில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திர அறையை திண்டுக்கல் தேர்தல் அதிகாரி பூங்கொடி தலைமையில் வாக்காளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மதுரை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பணி துவங்கப்படும் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வரும் பல்வேறு அரசியல் கட்சி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர். செல்போன் கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த பொருளும் உள்ளே கொண்டு செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மக்களவை தேர்தலில் 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 16 லட்சத்து 7 ஆயிரத்து 51 பேர் ஆகும். இதில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1812 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 11 லட்சத்து 43 ஆயிரத்து 187 ஆகும். இதில், அஞ்சல் வாக்குகள் 7 ஆயிரத்து 558 ஆகும். திண்டுக்கல் மாவட்ட பொதுமக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் பதிவான 9,993 தபால் வாக்குகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான தத்தனூர் எம் ஆர் சி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லப்படுகிறது. எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட உள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 10ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வரும் ஊழியர்களிடம் தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும். கால்நடைகளின் நலன் கருதியே கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.