Tamilnadu

News May 1, 2024

மீண்டும் விலை உச்சத்தை தொட்ட வெள்ளைப் பூண்டு

image

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இன்று 01.05.2024- ஒரு கிலோ மலைப்பூண்டு ரூபாய் 350- க்கும், ரசப் பூண்டு கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சாலையோரமாக விற்கப்படும் கடைகளில் விலை குறைவாக இருக்கும் என பொதுமக்கள் வரும் வியாபாரிகளிடம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு போன்றவற்றை வாங்குவதுண்டு. ஆனால் இன்று சாலையோர சில்லறை விற்பனை கடையில் கிலோ 200 ரூபாய்க்கு வெள்ளை பூண்டு விற்றதால் மக்கள் அதிர்ச்சி.

News May 1, 2024

கடலூர் அருகே விபத்து;மரணம் 

image

நேற்று புவனகிரி பெருமாத்தூர் பகுதியில் மின்சார பணிக்காக ஜேசிபி எந்திரம் மூலம் மின் கம்பம் அலட்சியமாக எடுத்துச் செல்லப்பட்டது.அப்பொழுது இருசக்கர வாகனத்தில் விருதாச்சலம் சாலையில் சென்று கொண்டிருந்த மயிலாடுதுறை சேர்ந்த பாபு (42) என்பவர் எதிர்பாராத விதமாக ஜேசிபி வாகனத்தில் மோதி,தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News May 1, 2024

திருச்சியில் ஆதார் உள்ளீடு பயிற்சி.

image

திருச்சி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 தன்னார்வலர்களுக்கு ஆதார் உள்ளீடு பயிற்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. எல்காட் நிறுவனத்தின் கருத்தாளர்கள் ராஜ்குமார் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். நிறைவு நாளான நேற்று மாவட்ட உதவி அலுவலர் அன்பு சேகரன் வாழ்த்தி பேசி தன்னார்வலர்களுக்கு ஆதார் உள்ளீட்டுக்கு தேவையான கருவிகளை வழங்கினார்.

News May 1, 2024

போலி மருத்துவர் சிறையில் அடைப்பு

image

ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் இரும்பேடு பகுதியை சேர்ந்த அமீன் தாஸ் தகிர் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவம் பயிலாமல் லேப் டெக்னீசியன் முடித்து மருத்துவராக மருத்துவம் பார்த்து வந்த அமீன் தாஸ் தகீரை, மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஆரணி போலீசார் நேற்று(ஏப்.30) இரவு  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 1, 2024

குடிநீர் வழங்க கோரி முற்றுகை போராட்டம் 

image

ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் பகுதியில் முறையாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News May 1, 2024

புதுக்கோட்டை: மகப்பேறு மருத்துவர் உயிரிழப்பு

image

கறம்பக்குடியை சேர்ந்தவர் கார்த்திக் மனைவி அஞ்சுகா (32) புதுக்கோட்டை அரசு இராணியார் மகப்பேறு மருத்துவ மனையில் பயிற்சி மருத்துவரா பணியாற்றி வந்தார் கடந்த 6 மாதமாக பேறுகால விடுப்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் பிரசவத்திற்காக அவர் பணியாற்றிய அதே இராணியார் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அதன் பின்பு அவருக்கு இரத்தப்போக்கு அதிகமாகி உயிரிழந்தார்.

News May 1, 2024

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 415 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக அதிகரித்து உள்ளது. முட்டை கோழி கிலோ ரூ.90 ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.124 ஆகவும் விற்பனையாகின்றது . கடந்த இரண்டு நாட்களில் முட்டை விலை 10 காசுகள் உயர்வடைந்துள்ளது.

News May 1, 2024

நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி

image

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சகாயராஜ் திருச்செந்தூர் சென்றுவிட்டு குடும்பத்தினருடன் நேற்று வேனில் ஊர் திரும்பி கொண்டு இருந்தார். வேன் உடன்குடி அருகே கல்லாமொழி அருகே எதிரே வந்த மற்றொரு வேனுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் சகாயராஜின் மனைவி சுமதி சம்பவ இடத்திலேயே பலியானார். 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 1, 2024

வீட்டுக் கடனை இன்சூரன்ஸ் நிறுவனமே செலுத்த உத்தரவு.

image

கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனாவால் உயிரிழந்த கோவை ரத்தினபுரியை சேர்ந்த செல்வராஜின் மகன் சுஜேஷ் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடன் அவர் பெற்ற வீட்டுக்கடன் நிலுவைத்தொகையினை செலுத்த கோரியுள்ளார். அதனை நிறுவனம் மறுக்கவே கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகாரளித்தார். இதை விசாரித்த தலைவர் தங்கவேல் கடன் நிலுவை தொகையை இன்சூரன்ஸ் நிறுவனமே செலுத்த வேண்டும் என நேற்று உத்தரவிட்டார்.

News May 1, 2024

அரியலூர் நகராட்சியில் மே தின விழா

image

அரியலூரில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு மே தினமான இன்று அரியலூர் நகராட்சி ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பாக ஏஐடியுசி கொடியை சங்க தலைவரும், உள்ளாட்சித் துறை சம்மேளன மாநில செயலாளருமான தண்டபாணி புது நகராட்சி அலுவலகம் முன்பும் கொடியேற்றினர்.

error: Content is protected !!