India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரியாபட்டி அருகே இன்று காலையில் சுமார் 1500 கிலோ வெடிமருந்துகள் வெடித்துச் சிதறியதில் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அக்குவாரியின் உரிமையாளர் சேதுராமன் என்பவரை போலீஸார் சற்றுமுன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான ராஜ்குமார், ராம்குமார் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் நேற்று(ஏப்.30) முத்துச்சாமி-தங்கநிலவு தம்பதியின் குடிசைவீடு தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்தது. இதனை அறிந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், தம்பதியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.10 ஆயிரம் உதவித்தொகை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர், து.செயலாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.
செங்கல்பட்டு வில்லியம்பாக்கம் கன்னியம்மன் கோவில் அருகேயுள்ள குளத்தில் நேற்று ஆண் சடலம் மிதப்பதை கண்ட கிராம மக்கள் செங்கல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் வில்லியம்பாக்கம் காந்தி தெருவை சேர்ந்த கோவிந்தசாமி என்பது தெரியவந்தது.
கடந்த சில நாட்களாக, மதிய வேளையில், மதுரை மாநகரம் தொடர்ச்சியாக 100 டிகிரி பாரன் ஹீட் வெப்பநிலையை எட்டி வருகிறது.அதனால், மதுரை மாநகராட்சி நிர்வாகம் கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு, தினமும் பகல் வேளையில், நகரின் முக்கிய சாலைகளில் லாரி தண்ணீரை ஊற்றி வருகிறது.இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் மட்டும் தான் மூலவரும் , உற்சவருக்கு ஒரே மாதிரி காட்சி அளிக்கும் சிறப்பு பெற்ற தலம். ஆதிசங்கரர் வழிபட்ட தலம் என்ற சிறப்பை பெற்றது. இங்கு சித்திரை – வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெறும். இச்சிறப்பு பெற்ற கொப்புடைய நாயகி அம்மனுக்கு நாட்டார், நகரத்தார் சார்பில் வைர கிரீடம், இரு வைர தோடுகள் நேற்று உபயமாக அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசியில் வாக்கு எண்ணும் மையத்தில் 95 கேமராக்கள் பழுதாகியுள்ளது . திடீரென இடி, மின்னல் ஏற்பட்டதால் கேமரா பாதிப்பு என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ள நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு பாதிப்பை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழுதடைந்த கேமராக்கள் அகற்றப்பட்டு புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன.
காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி சுமீரன் சர்மா தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர். ஆய்வில் விபத்து ஏற்பட்ட வெடிமருந்து குடோனிலிருந்து தான் வெடிமருந்துகள் சேகரித்து வைக்கப்பட்டு மாவட்டம் முழுவதுமுள்ள குவாரிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டதும், 1500 கிலோ வெடிமருந்து அந்த குடோனில் வைக்கப்பட்டிருக்ககலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் வெளுத்து வாங்கினாலும் மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 1) வெளியிட்டுள்ள மழை அளவு செய்தி குறிப்பில் அதிகபட்சமாக காக்காச்சி பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக மாவட்டத்தில் 18 மீட்டர் மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சிவகங்கை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு இன்ஜி கல்லுாரி வளாகத்தில் பொருத்திய 243 ‘சிசிடிவி’ கேமராக்களும் கோடை வெப்பத்தால் பாதிக்கின்றதா , செயல்படுகிறதா என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்வதோடு, ‘சிசிடிவி’ கட்டுபாட்டு அறையில் ‘ஏசி’ பொருத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரடி பகுதியில் இன்று கும்பகோணத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மோதியதில் ஒருவருக்கு தலையில் படுகாயமும் மற்றவருக்கு இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.