Tamilnadu

News May 1, 2024

திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள திமுக தலைமை அலுவலகம் அருகே ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் ஆர்.வினோத் காந்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டார்.

News May 1, 2024

குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்திடுக

image

பழனி அடிவாரத்தில் உள்ள 8 வார்டுகளுக்கு கோடைகால நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குறைந்து போனது. பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் லாக்கி இருந்து நீர்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என மார்க் கம்யூனிஸ்ட் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News May 1, 2024

திண்டிவனம்: இறந்தவரின் கண் தானம்

image

திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் ட்ரஸ்ட்
Ln. ஸ்மைல் ஆனந்த் ஏற்பாட்டில் இன்று (மே 1) கண் தானம் வழங்கப்பட்டது.
திண்டிவனம் நல்லியகோடன் நகர் உமாபதி தெரு விரிவாக்கத்தில்
வசித்து வந்த
சென்னம்மாள் என்பவர் இயற்கை எய்தியதை தொடர்ந்து,
அம்மையாரின் கண்கள்
பார்வை குறைபாடுள்ள நாலு நபர்கள் பயன்பெறும் வகையில் புதுவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண் தானமாக வழங்கப்பட்டது.

News May 1, 2024

 ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

image

ஆம்பூர் அடுத்த மேல்சணாங்குப்பம் பகுதியில் கடந்த சில தினங்களாக ஊராட்சி மன்ற சார்பில் குடிநீர் சீராக வழங்கவில்லை. பல முறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

News May 1, 2024

சிவகங்கை ஆத்தங்குடி அரண்மனை சிறப்புகள்!

image

ஆத்தங்குடி அரண்மனை சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி ஊரில் அமைந்துள்ளது. காரைக்குடி, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கோதமங்களம் பகுதிகளில் பிரபலமான செட்டிநாடு வீடுகள் உள்ளன. அரண்மனை போல அமைந்திருக்கும் இந்த வீடுகள், இறக்குமதி செய்யப்பட்ட உயர் வகை மரங்கள், மற்றும் கண்ணாடிகள் பயன்படுத்தி மிகுந்த வேலைபாட்டுகளுடன் காட்சியளிக்கிறது. இவை 80 முதல் 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், புதுப்பொலிவுன் நிற்கிறது.

News May 1, 2024

வேளாண்மை கல்லூரி மாணவிகள் களப்பணி

image

பெரம்பலூர், குரும்பலூர் கிராமத்தில் (ஏப்.30) நேற்று திட்டக்குடி JSA வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் குழுவாக ஊரக வேளாண்மை பயிற்சியின் ஓர் பகுதியாக நெற்பயிருக்கு ஊட்டச்சத்து கரைசல் எவ்வாறு தயார் செய்து பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த உற்பத்தியைப் பெருக்க விவசாயிகளுடன் வயல்களில் செயல்முறை செய்து பயிற்சி மேற்கொண்டு களப்பணி செய்தனர்.

News May 1, 2024

தி.நகர்: தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்!

image

தி.நகரில்‌ உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் கன்னியாகுமரியை சேர்ந்த வினிஷா(24). திருமணமாகாத இவருக்கு, உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கர்ப்பமாகி உள்ளார். இந்நிலையில் 7 மாதமாகி குறை பிரசவத்தில், தனக்குத் தானே பிரசவம் பார்த்து அதனை கொலை செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 1, 2024

போலீசாரை தாக்கிய 2 ஆசாமிகள் கைது

image

ஊட்டி நகர காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் மனோஜ்குமார் மற்றும் அருள் பாண்டி. இவர்கள் நேற்று
(ஏப் 30) படகு இல்லம் சாலையில் போக்குவரத்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக குடி போதையில் வந்த ராஜேஷ் (39), ஜீவா(38) ஆகியோர் தகராறில் ஈடுபட்டதுடன் கற்கள் வீசி தாக்கி உள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

News May 1, 2024

தாயின் நினைவை போற்றும் மகன்

image

தரங்கம்பாடி தாலுகா சாத்தங்குடியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தரங்கம்பாடி பேரூராட்சியில் 9ஆவது வார்டு உறுப்பினர் ஜோன்ஸ் செல்லப்பா தனது தாயின் 16 வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி காப்பகத்திற்கு நேரில் சென்று இன்று மதியம் உணவு வழங்கினார்.

News May 1, 2024

வெடி விபத்து: முதல்வர் இரங்கல்

image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரியில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 3 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும் என்றார்.

error: Content is protected !!