Tamilnadu

News May 1, 2024

மலை சாலை ஓரத்தில் சமையலுக்கு தடை

image

குன்னூர், கல்லார் முதல் காட்டேரி வரையிலான வளைவு சாலை, வன விலங்கு நடமாடும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் எக்காரணம் கொண்டும் சாலை ஓரம் சமைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அறிவித்து உள்ளது. மேலும் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறுகையில், சாலை ஓரங்களில் மது அருந்துவது, வன விலங்குகளை கண்டதும் செல்பி, புகை படம் எடுப்பது கூடாது என்றார்.

News May 1, 2024

பரமக்குடி: மினி பேருந்து மோதி வாலிபர் பலி

image

பரமக்குடி அருகே வெங்கிட்டங்குறிச்சி சேர்ந்த  ஞானபிரகாசம் மகன் ஆனந்த பிரபாகரன் (18). இன்று மாலை தாத்தா திரவியம் என்பவரை அழைத்து வர டூவிலரில் பரமக்குடி பஸ் நிலையம் நோக்கி சென்றார். கிருஷ்ணா தியேட்டர் அருகே மினி பேருந்து பின் சக்கரம் ஏறி தலை நசுங்கி ஆனந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து டிரைவர் கார்த்திக் (41) என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 1, 2024

தந்தையின் சொத்துக்களை அபகரித்த மகன்: கண்ணீர் மல்க மனு

image

திருவள்ளூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (76). இவருக்கு பாலாஜி என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். ரகுநாதனின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். பாலாஜி தனது தந்தை ராகுநாதனின் சொத்துக்களை பறித்து கொண்டு அவரை வீட்டை விட்டு வெளியேற்றி பிச்சை எடுக்க வைத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரகுநாதன் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர் மல்க மனு அளித்தார்.

News May 1, 2024

விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

image

சேரன்மகாதேவி அடுத்த சக்தி குளம் பகுதியை சேர்ந்தவர் ராமையா மகன் முருகன் (56). விவசாயியான இவரது வீட்டில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் பெட்ரோல் குண்டு மர்ம நபர்களால் வீசப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 1, 2024

வேலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

வேலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 1) தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று மாலை 7 மணி வரை வேலூரில், இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியும், வழுக்கலான ரோடுகளாகவும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

சாலையில் கொட்டி கிடந்த ஆதார் அட்டைகளால் பரபரப்பு

image

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா திருவள்ளூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் சாலையில் கொட்டிக் கிடந்தன. இந்த ஆதார் அட்டைகளை அப்பகுதியினர் சேகரித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.முதற்கட்ட விசாரணையில் லால்குடிக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட ஆதார் அட்டைகள் தவறி சாலையில் விழுந்திருக்கலாம் என தெரிவித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

News May 1, 2024

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில் சிறப்பு

image

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பல புராணக் கதைகளைத் தாங்கிய இக்கோவிலில் 2017 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் பழைய திராவிடக் கட்டடக்களையை கொண்டு உள்ளது.

News May 1, 2024

திருவண்ணாமலை: மழைக்கு வாய்ப்பு!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 1) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் (8 மணி வரை ) திருவண்ணாமலையில், இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியும், வழுக்கலான ரோடுகளாகவும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

திருப்பத்தூர் மழைக்கு வாய்ப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே.01) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் (7 மணி வரை) திருப்பத்தூரில் , இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியும், வழுக்கலான ரோடுகளாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

அந்தியூர்: ரூ.16.50 லட்சம் மோசடி

image

அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவருக்கு ஈரோட்டை சேர்ந்த குருதேவ் என்பவர் மூலம் ராஜேஷ்குமார் (36) என்ற நபர் அறிமுகமானார். சென்னை தலைமைச் செயலகத்தில்
மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி, அங்கமுத்துவிடம் ரூ.16.50 லட்சத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவானார். அங்கமுத்து அளித்த புகாரின் பேரில் போலீசார் ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

error: Content is protected !!