India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் எலுமிச்சைபழத்தின் வரத்து குறைவால், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.60-க்கு விற்ற எலுமிச்சைப்பழம், தற்போது விளைச்சார் குறைவால் கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் மார்ச் 1 முதல் நேற்று ஏப்ரல் 30 வரையிலான கோடை காலத்தில் தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 212 மிமீ மழையும் மாஞ்சோலையில் 209 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
மே மாதத்திலும் மாஞ்சோலையில் அதிக மழை பெய்யும் என நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (மே 1) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தனியார் பள்ளியிலுள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இன்று “தொழிலாளர் தினத்தை” முன்னிட்டு தேர்தல் பணி மேற்கொள்ளும் காவல்துறையினர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக துறை சார்ந்த அலுவலர்களால் உணவு வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703504 என்ற கைபேசி எண் வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பான பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு, மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில், 4,700 பேர் தேர்வெழுத உள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற 236 பேர் மற்றும் அரசு மாதிரி பள்ளியில் (எலைட்) பிரத்தியேகமாக நீட் தேர்வுக்கு பயின்ற 74 பேர் என மொத்தம் 310 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
கலசபாக்கம் அடுத்த முத்தரசம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது சகோதரர் ரமேஷ். இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை சுரேஷை வழிமறித்த ரமேஷ் அவரை சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் இன்று வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில், “அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தங்களுடைய உழைப்பாளர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் பபிஷா(18). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள கேஜிஐஎஸ்எல் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இன்று காதல் பிரச்சனையில் விடுதி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்துள்ளார். அவரை மீட்ட சக மாணவிகள் சிகிச்சைக்காக கேஜி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இதுவரை இல்லாத வகையில் கள்ளக்குறிச்சியில் இன்று 108° செல்சியஸ் வெயில் கொளுத்தி வருகிறது. அது மட்டுமன்றி வெப்ப அலையும் அதிகளவில் இருந்து வருவதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
ஈரோடு, எஸ்.எஸ்.பி நகர் பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பவானி அடுத்த பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த கவிதா (30) என்பவரும் வேலை செய்துள்ளார். இந்நிலையில், இன்று மதியம் கவிதா வேலை செய்தபோது, அவரது சேலை கான்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.