India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருபத்தூர் பகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் தற்போதைய முன்னனி நிலவரம் வெளியாகியுள்ளது.
திமுக வேட்பாளர் 75036, அதிமுக வேட்பாளர் 47317,
பாஜக வேட்பாளர் 25829, நாத வேட்பாளர் 12905 வாக்குகள் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் முன்னிலையில் உள்ளார்.
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்- 83184 வாக்குகள் பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 52631 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
பாஜக : 41836
நாம் தமிழர்: 16908
காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் மூன்றாவது சுற்று முடிவில் 30553 வாக்குகள் முன்னிலை
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் 12.30 pm மணி நேர நிலவரம்:
6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மதிமுக – துரை வைகோ – 145883, அதிமுக – கருப்பையா – 66,738, அமமுக – செந்தில்நாதன் – 30,985, நாதக – ராஜேஷ் – 30,335 வாக்குகள் பெற்றுள்ளனர். 79,145 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
மதுரையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி தேர்தல் கமிஷனுக்கு அதிமுக வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் புகார் மனு அளித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் சங்கீதா செயல்படுவதாக குற்றச்சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சரவணன், மதுரை பாராளுமன்ற தேர்தல், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி, இந்திய தேர்தல் கமிஷனுக்கு புகார் மனு அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
பெரம்பலூர் மக்களவை தேர்தல் முடிவு விவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.என்.அருண் நேரு இரண்டாம் சுற்று முடிவில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதை தொட்டியம் திமுக மகளிர் அணியினர் கொண்டாடி வருகின்றனர். தொட்டியம் யூனியன் சேர்மன் கிருஷ்ணவேணி தலைமையில் மகளிர் அணியினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி 6 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,34,005 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 90,525 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 29,556 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1257 வாக்குகள் பெற்று 4 ஆம் இடத்தில் உள்ளனர்.
திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் 6வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது இதில் திமுக கூட்டணி 31630 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளது.. அதிமுக கூட்டணி 8658 வாக்குகள், பிஜேபி 8252 வாக்குகள், நாம் தமிழர் 3831 வாக்குகள், நோட்டா 698 வாக்குகளும் பெற்றுள்ளன. இது 6 வது சுற்றின் வாக்கு எண்ணிக்கை மட்டுமே.
தென்காசி மாவட்ட பாராளுமன்ற தொகுதி 12.25மணி நிலவரப்படி, தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய ஆறு தொகுதிகளில் என்னப்பட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரம். தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை விபரம் தற்போது, 12.25 மணி நிலவரம் திமுக 114644, அதிமுக, 60103 பாஜக, 53717 நாத, 33902 வாக்குகள் பெற்றுள்ளது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது.
திமுக 1,54,768, தேமுதிக 65,972, பாஜக 50,839, நாம் தமிழர் 40,673 வாக்குகள் பெற்றுள்ளன. திமுக வேட்பாளர் பாஜக வேட்பாளரைவிட 88,796 வாக்குகள் பெற்று முன்னிலையுடன் திகழ்கிறார். ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் ஆதிக்கம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 9ம் சுற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் – 2,31,288,அதிமுக குமரகுரு – 2,06,814,பாமக தேவதாஸ் – 29,008,நாதக ஜெகதீசன் – 29,002, இதில் திமுக வேட்பாளர் – 24,474 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
Sorry, no posts matched your criteria.