India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்சாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார்.இவர் நேற்று வேல்நகரில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு தனது உறவினர் முத்து என்பவருடன் டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்தார். சில்வார்பட்டி பிரிவு அருகே வேகமாக சென்ற டூவீலர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்து மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம் கீரப்பாக்கம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கல் குவாரி ஒன்று உள்ளது. இங்கு தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் நேற்றிரவு குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மூவர் திடீரென மாயமாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தற்போது மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி அய்யாசாமி காலனியைச் சேர்ந்தவர் அசரியா மனைவி எஸ்தர் (52). இவர் கடந்த 26 ஆம் தேதி கோயமுத்தூரில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயமுத்தூர் சென்றுவிட்டு நேற்று காலை ஊர் திரும்பினார். அப்போது அவரது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 36 பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.02) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று (மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கே வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்-உம் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத பொட்டலங்களில் காலாவதி தேதி இன்றி விற்கப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் தலைமையில் இன்று ஆய்வு நடந்தது. ஆய்வில் முகப்பு சீட்டு இல்லா பொட்டலங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பிரசாத பொட்டலங்களில் தயாரிப்பு, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் அச்சிட்டு விற்க அறிவுறுத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று (மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கே வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்-உம் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (மே.02) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தேசிய விடுமுறை தினமான மே.1 இல் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். அதன்படி நேற்று தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம் ) மலர் கொடி தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் நேற்று ஆய்வு நடத்தினர். அதில் 50 நிறுவனங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி அணையர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மே.02) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.