Tamilnadu

News May 2, 2024

பாலம் கட்டும் பணிகளை துரிதப்படுத்திய அமைச்சர்

image

மன்னார்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதுப்பாலத்தை அகற்றி அகலமான கான்கிரீட் பாலம் கட்ட தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பழைய குறுகிய கம்பி பாலம் உடைத்தெடுக்கும் பணி முடிவுற்றது. தற்போது புதிய அகலமான பாலம் கட்டும் பணி விவரங்களை தொழில் துறை அமைச்சர் ராஜா இன்று நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். நகரமன்ற தலைவர் சோழராஜன் நகரசெயலாளர் வீரா கணேசன் உடனிருந்தனர்.

News May 2, 2024

புதுகை அருகே மீன்பிடி திருவிழா

image

பொன்னமராவதி
அருகே உள்ள கொப்பனாங்கண்மாயில் மழை பெய்யவும், விவசாயம் தழைக்க வேண்டியும் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான விரால், சிலேபி, அயிரை, கெண்டை ஆகிய மீன்கள் கிடைத்தன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News May 2, 2024

புனித மூவரசர் தேவாலயத்தில் நவ நாள் கொடியேற்றம்

image

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நேற்று பள்ளித்தம்பம் புனித மூவரசர் தேவாலயத்தில் நவ நாள் திருவிழா பங்குத்தந்தை சூசை சவரி யண்ணன் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டது. மே.9ஆம் தேதி காலையில் நவ நாள் திருப்பலி, மாலை 4.30 மணிக்கு பொங்கல் விழா இரவு 8 மணிக்கு மின்னொளி தேர் பவனி நடைபெற உள்ளது.

News May 2, 2024

நாமக்கல்: மே தின நிகழ்ச்சிகள் தொழிலாளர்கள் பங்கேற்பு

image

நாமக்கல், திருச்செங்கோட்டில் மே தின ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. மே தின ஊர்வலத்தில் பங்கேற்ற விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பேசினர். நிகழ்ச்சிகளில் நாமக்கல் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான விவசாயிகள் தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News May 2, 2024

புதுவை: திரௌபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம்

image

புதுச்சேரியில் உள்ள மணவெளி பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பஞ்சபாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு அர்ஜுனன் திரௌபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாண உற்சவத்தில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் மற்றும் அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News May 2, 2024

கணவன் மனைவியை கத்தியால் குத்திய முகமூடி மனிதர்கள்

image

உசிலம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சங்கர்(44). நேற்றிரவு இவரது மனைவி ராஜம்மாளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் கதவைத் தட்டி வீட்டிற்குள் நுழைந்து, கத்தியால் கணவன் மனைவியை குத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். மர்ம நபர்கள் குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 2, 2024

கரூரில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவு

image

கரூரில் வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கிறது. நேற்று (மே.01), 44°C (111.2° F) எனப் பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலை வழக்கத்தை விட 7.2°C (44.96° F) அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று கரூர் மாவட்டத்திற்கு முதன் முதலாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வெய்யிலின் தாக்கத்திலிருந்து கரூர் மக்கள் தங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News May 2, 2024

வேலூரில் ஜொலிக்கும் பொற்கோவில் சிறப்புகள்!

image

ஸ்ரீ புரம் என்றழைக்கப்படும் ஸ்ரீ லஷ்மி நாராயணி கோவில் வேலூர், திருமலைகோடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், 1500 கிலோகிராம் சுத்த தங்கத்தைப் பயன்படுத்தி செய்த தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இது அமிர்தசரசில் இருக்கும் பொற்கோயிலின் உட்புற விமானத்தின் அளவை விட இரட்டிப்பாக உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் நட்சத்திர வடிவம் போல் கோயில் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

கோவை: தபால் வாக்குகள் எண்ண 6 குழுக்கள் தயார்

image

கோவையில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு மட்டும் துணை ஆட்சியர்கள் தலைமையில் 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி, வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளராக ஒரு தாசில்தார், வாக்குகளை எண்ணுவதற்கு உதவியாளராக ஒருவர் என 3 பேர் நியமித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

News May 2, 2024

பெற்றோர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (மே 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை காலத்தில் விடுமுறையில் வீட்டில் உள்ள மாணவர்கள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்து அவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்த உறுதுணையாக இருங்கள் என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

error: Content is protected !!