Tamilnadu

News May 2, 2024

மதுரை மழைக்கு வாய்ப்பு!

image

மதுரை மாவட்டத்தில் இன்று (மே.02) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 2, 2024

பிரதான அணைகளின் இன்றைய நிலவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணையில் இன்று (மே 2) காலை நிலவரப்படி நீர் இருப்பு 57.20 கன அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக 254.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது . இதேபோல் மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 88.70 கன அடியாக உள்ளது. இதிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது.

News May 2, 2024

தஞ்சை: உணவு பதுக்கல் குறித்து புகார் தெரிவிக்க!

image

திருச்சி மண்டல உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுரையின்பேரில், கட்டணமில்லா தொலைபேசி எண்கள் குறித்த போஸ்டர் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உணவு பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் பஸ் நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1800 599 5950  ஒட்டப்பட்டுள்ளன.

News May 2, 2024

சிசிடிவி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனை கண்காணிக்கும் பொருட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கேமராவின் படக் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News May 2, 2024

கடலூரில் நீர்மோர் பந்தல் திறப்பு

image

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கடலூர் திமுக கட்சி சார்பில் முதுநகர் பகுதியில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாநகர மேயர் சுந்தரி ராஜா மற்றும் திமுக மாநகர செயலாளர் ராஜா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழ வகைகளை வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி செந்தில் அனைவரையும் வரவேற்றார்.

News May 2, 2024

கள்ளக்குறிச்சி: ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தனிப்படை போலீசார் நேற்று உளுந்துார்பேட்டை கடை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த இலுப்பையூர் பகுதியைச் சேர்ந்த தேவா(18), மதியனூரை சேர்ந்த தமிழரசன்(18), நிஷாந்த் 19 ஆகியோரை விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் இடுப்பில் கத்தியுடன் சுற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

News May 2, 2024

நிலக்கோட்டையில் 5 சென்டி மீட்டர் மழைப்பதிவு

image

கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதியில் 5 சென்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மழைப்பொழிவு அப்பகுதி மக்களுக்கு, வெயில் தாக்கத்திலிருந்து சற்று ஆறுதல் அளித்தது.

News May 2, 2024

தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வேண்டுகோள்

image

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு வரும் 7ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மே 2) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த உத்தரவை ரத்து செய்ய தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News May 2, 2024

திருச்சியில் அண்ணா சிலைக்கு காவி சாயம்

image

திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை கடைவீதியில் உள்ள அண்ணா சிலை மீது மர்ம நபர்கள் இன்று காலை காவி சாயம் பூசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.அண்ணா சிலைக்கு காவி சாயம் பூசிய மர்ம நபர்களை பொன்மலை போலீசார் தேடி வருகின்றனர். அதே நேரம் அண்ணா சிலைக்கு காவி சாயம் பூசிய விவகாரம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.சமீப காலமாக காவி சாயம் பூசும் மர்ம நபர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

News May 2, 2024

தென்காசி நகராட்சி சேர்மனுடன் சந்திப்பு

image

தென்காசி நகராட்சியில் இன்று மமக 21வது கிளையின் சார்பாக நகராட்சி கவுன்சிலர் அபுபக்கர் தலைமையில் நகராட்சி சேர்மன் சாதிரை நேரில் சந்தித்து பேசினர்.
அப்போது, சொர்ணாபுரம் ரோடு மாட்டு அருப்பு நிலையம் கீழ்புறம் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவதற்கு நன்றி தெரிவித்தனர்.

error: Content is protected !!