Tamilnadu

News May 2, 2024

கள்ளக்குறிச்சி: தங்கச் சங்கிலி பறித்த திருடர்கள் கைது

image

திருக்கோவிலூர் அருகே நேற்றுமாலை 2 பேர் பள்ளி ஆசிரியையிடம் 4.5 சவரன் செயினைப் பறித்து பைக்கில் தப்பியோடினர். தகவலறிந்த போலீசார் வாகன தணிக்கை செய்த போது, இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பி அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் புகுந்தனர். சுற்றி வளைத்து விடிய விடிய போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இன்று அதிகாலை அபிமன்யம் (23), அருள் ஜோதி (26) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

News May 2, 2024

40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெயில் அளவு கூடுதல்

image

கோவையில் 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகி உள்ளது. இதன்படி, கோவையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெயில் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் துறை தலைவர் சத்யமூர்த்தி இன்று கூறினார். மேலும், ‘நடப்பாண்டில் கால நிலை மாற்றத்தால் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

News May 2, 2024

தண்ணீரை மாசு படுத்தினால் கடும் தண்டனை

image

கோவையில் பல்வேறு அணைகள் நீர் இல்லாமல் வரண்டுள்ளன. இந்நிலையில், தமிழக மக்கள் ஆனைகட்டி வழியாக வந்து கேரள நீர் நிலைகளை மாசுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சோலையூர் ஊராட்சி நிர்வாகம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழக மக்கள் கேரள நீரை மாசு படுத்தும் பட்சத்தில் 6 மாதம் முதல் 8 மாதம் சிறை தண்டனையும் 10000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. 

News May 2, 2024

திருப்பத்தூர் : தேர்வு போட்டி அறிவிப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் சாதனை புரிவதற்கு ஏற்ப தங்குமிடம் விளையாட்டு பயிற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. திருப்பத்தூரில் இதனை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

News May 2, 2024

ஈரோடு: ஒரே நாளில் 81 நிறுவனங்கள் மீது வழக்கு

image

ஈரோடு மாவட்டத்தில், மே.1ஆம் தேதி தொழிலாளா் தினத்தன்று , ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் 100 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

News May 2, 2024

திண்டுக்கல் : இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” பெற தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இணையதளம் மூலம் மே.15ஆம் தேதி மாலை 4.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இணையதளம் www.sdat.tn.gov.in-ல் பார்த்து அறிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 7401703504 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News May 2, 2024

புதுச்சேரிக்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் புதுச்சேரி, தாலுகா வாரி பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 9160322122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

News May 2, 2024

திருச்சி ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு

image

திருச்சி ரயில்வே செய்தி குறிப்பில் திருச்சி-தஞ்சை ரயில் திருவாரூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மே 2 முதல் இரவு 8:25க்கு புறப்படும் தஞ்சை ரயில்,திருவாரூர் வரை நீடிக்கப்பட்டுள்ளது.இந்த ரயில் திருவாரூருக்கு இரவு 11.05க்கு சென்றடையும்.மேலும் மறு மார்க்கத்தில் மே 3முதல் திருவாரூரில் இருந்து காலை 4.45க்கு புறப்பட்டு 7 மணிக்கு திருச்சி வந்து சேரும்.

News May 2, 2024

கிருஷ்ணகிரி மாவட்டதில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 2, 2024

தூத்துக்குடி: விபத்தில் 13 பேருக்கு படுகாயம்

image

மதுரை சங்கிமங்கலத்தைச் சேர்ந்த 13 பேர் விளாத்திகுளம் அருகே உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர். கீழஈரால் பகுதியில் சென்ற போது சுற்றுலா வேனின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 13 காயமடைந்தனர். இதனையடுத்து, காயமடைந்த 13 பேரும் எட்டயாபுரம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!