India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நீண்ட நாள் கோரிக்கையான பேட்டரி கார் சேவை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. தொடர்ந்து ஒரு நபருக்கு 30 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும் நிலையில் 9994165945 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ரயில் பயணிகள் பயன்படுத்தலாம் என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மலை அடிவாரம் பகுதியில அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் இன்று அம்மனுக்கு சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஆலங்குடி அருகே கீழப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல்(53). டாஸ்மாக் மேற்பார்வையாளர். இவரது மனைவி இந்திராணி. இவர்களது மகள் ராஜலெட்சுமி(17). சம்பவத்தன்று பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியது. அருகிலிருந்தவர்கள் சென்று பார்த்தபோது ராஜலெட்சுமி உடல்கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த சம்பட்டி விடுதி போலிஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் மே 5ஆம் தேதி வணிகர் சங்க மாநாடு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் மாநிலம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள், தலைவர், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர்.இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 108.86 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறைந்தபட்சமாக 84.74 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
நெல்லையிலிருந்து திருச்சி வழியாக காசி, திருவேணி சங்கமம், அயோத்தி மற்றும் கயா ஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்று வர IRCTC சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் 6 ஆம் தேதி துவங்கும் இந்த சுற்றுலா ரயில் மொத்தம் ஒன்பது நாட்கள் பயணம் செய்கிறது. இந்த ரயிலில் ஒரு நபருக்கு ரூபாய் 18 ஆயிரத்து 550 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தெற்கு ஒன்றிய திமுக சார்பில், சூளகிரி ரவுண்டானாவில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் தலைமையில் நடந்த தண்ணீர் பந்தலை ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் உள்ளிட்டவை வழங்கினார். அப்போது ஒன்றிய துணை செயலாளர் முனிச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தேனி (வடக்கு) நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று அல்லிநகரம் பகுதியில் நீர் மோர் பந்தலை தேனி (வடக்கு) மாவட்ட செயலாளர் காசிமாயன் திறந்து வைத்து, தர்பூசணி பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின்போது, தேனி வடக்கு நகர செயலாளர் குரு கணேசன் தலைமை வைத்தார். கழக அமைப்புச் செயலாளர் கதிர்காமு முன்னிலை வைத்தார். உடன் தேனி நகர பொறுப்பாளர்கள் உள்ளனர்.
ஈரோட்டில் நாளுக்கு நாள் 100 டிகிரி தாண்டி பொதுமக்களை வாட்டி வருகிறது. இந்த தாக்கத்தை குறைப்பதற்காக பொதுமக்கள் அனுதினமும் நுங்கு இளநீர்,மோர், தயிர் போன்றவர்களை பயன்படுத்தி தாக்கத்தை குறைத்து வருகின்றனர். இந்த நிலையில் திருநகர் காலனி பகுதியில் மோட்டார் மெக்கானிக் எதிர் எதிரே மின்விசிறி வைத்து தாகத்தை குறைக்கின்ற காட்சி வைரலாகி வருகிறது.
ஈரோட்டில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 18005995950, ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் 9498168363, ஈரோடு மாவட்ட காவல் ஆய்வாளர் 8072628234, ஈரோடு மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் 9498175888 ஆகிய எண்ணில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான தகவல் தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.