Tamilnadu

News May 4, 2024

குமரி: எம்-சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்

image

குமரி அருகே கொல்லங்கோடு சூழால் சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று(மே 3) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டாரஸ் லாரி ஒன்று எம்-சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு கேரளம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில், ஜல்லிகள் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி பெற்று எம்-சாண்ட் கடத்தியது தெரியவந்தது. லாரி ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் லாரியை பறிமுதல் செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News May 4, 2024

மதுரை: மோடிதான் மீண்டும் பிரதமராவாா்

image

மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள், வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
” தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது மிகவும் மோசமான செயலாகும். மீண்டும் நரேந்திர மோடி தான் மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராவாா் . மாற்றங்களுக்குத் தயாராவோம் ” என்றாா்.

News May 4, 2024

விருதுநகர் அருகே கேந்தி பூ சாகுபடி பாதிப்பு…!

image

வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 120 ஏக்கரில் கேந்தி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானவாரி நிலங்களில் கிணற்றுப் பாசனத்தை நம்பி பயிரிடப்பட்டது. கிணற்றில் தண்ணீர் வற்றியதன் காரணமாகவும் தொடர் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக கேந்தி பூச்செடிகள் வாடி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

News May 4, 2024

சென்னை: காதலனுக்காக தீக்குளித்த பெண் உயிரிழப்பு!

image

தண்டையார்பேட்டை பகுதியில் கணவரை பிரிந்த நந்தினி என்ற பெண், மணிகண்டன் என்பவரோடு 4 வருடமாக வாழ்ந்து வந்துள்ளார். மணிகண்டனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதால், நேற்று(மே 3) அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது நந்தினி தனக்குதானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் 70% காயத்தோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 4, 2024

தூத்துக்குடி:தீப்பெட்டி ஆலைகளில் பாதுகாப்பு நடவடிக்கை

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தி தோப்பில் உள்ள தீப்பெட்டி ஆலையில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஆலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தீப்பற்றக்கூடிய பொருட்களை பாதுகாப்பான முறையில் தீப்பெட்டி ஆலையில் வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

News May 4, 2024

தென்காசி அருகே மறைத்து எடுத்து வரப்பட்ட கோழிக்குஞ்சுகள்

image

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து தென்காசி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான புளியரையில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த லாரியை சோதனைச் சாவடியில் சோதனை செய்த போது லாரிக்குள் கோழிக்குஞ்சுகளை மறைத்து வைத்துக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த லாரி கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

News May 4, 2024

கோடைகால விழிப்புணா்வு நிகழ்ச்சி

image

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை அடுத்த நாட்டேரி கிராமத்தில் கோடைகால விழிப்புணா்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மருத்துவா் யோகேஸ்வரன் தலைமை வகித்து பேசியதாவது, வெப்ப அலையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக உடலில் நீர்ச் சத்து குறையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும் பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்.

News May 4, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் 104 டிகிரி வெப்ப நிலை பதிவு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டுள்ள ஏலகிரி மலை. 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட ஏலகிரி மலை வாசஸ்தலமாகும் . மரங்கள் அழிப்பதாக ஏலகிரி மாலையிலும் 104 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ளது.

News May 4, 2024

செங்காளியம்மன் அலங்காரத்தில் பிடாரியம்மன் காட்சி

image

‌திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சிநேகவல்லி அம்மன் கோவிலின் உப கோவிலான ஸ்ரீ அறம்வளர்த்த பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 5ஆம் திருநாளையொட்டி பிடாரி அம்மன் செங்காளி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை முத்துக்குமார் பட்டர் செய்திருந்தார்.

News May 4, 2024

திருவள்ளூர்: மின்தடை அறிவிப்பு

image

புழல் துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (மே 4) காலை 9 மணி முதல் 12 மணிவரை புழல், சூரப்பட்டு, விநாயகபுரம், செங்குன்றம் புழல் சிறைச்சாலை மற்றும் குடியிருப்பு பகுதி, நாகப்பா எஸ்டேட், காவாங்கரை, காந்திசாலை, சக்திவேல் நகர், கண்ணப்ப சாமி நகர், மகாவீர் கார்டன், திருநீலகண்டன் நகர் உள்ளிட்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது என மின்சாரத்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!