India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்றுவருகிறது. இதுவரை இந்த இரு வழிச்சாலையை தற்போது நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த நெடுஞ்சாலை ஓரங்களில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. எனவே காங்கேயம் கரூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் அருகே ஆளில்லாத ரயில் பாதையைக் கடக்க முயன்ற சிற்றுந்து மீது ரயில் மோதிய விபத்தில் 9 கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.
இந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 551, அதற்கான வட்டி, வழக்கிற்கான மொத்த செலவு ஆகியவற்றுடன் சோ்த்து வழங்க உத்தரவிடப்பட்டது.
நேற்று தேனி மாவட்டம்
கம்பத்தில் இறைவி சம்ஸ்கிருதி நுன்கலைப்பள்ளி சார்பாக திருநாவுக்கரசர் குருபூஜை விழா, சதங்கை விழா நடைபெற்றது.
விழாவில் மதுரை ஆதினம்
293வது பீடாதிபதி பூஜனீய ஸ்ரீலஸ்ரீஹரிஹர ஞானசம்பந்ததேசிக பரமாச்சாரியசுவாமிகள்
கலந்துகொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் மாவட்ட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பாம்பன் ரயில்வே பாலம் கட்டுமான பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்தது. இதுகுறித்து நேற்று செய்தி அறிக்கை வெளியிட்டுள்ள மதுரை கோட்டம், நவீன வசதிகளுடன் ரூ. 550 கோடியில் புதிய பாலம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், புதிய பாம்பன் பாலம் பயன்பாட்டுக்கு வந்தவுடன் புதிய ரயில்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகா், மேலூா், திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்படாதவாறு, சீரான குடிநீா் விநியோகம் நடைபெறுவதை உள்ளாட்சித் துறை அலுவலா்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் மே 1ஆம் தேதி 110.48 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. பின்னர் மே 2இல் அதிக அளவாக 111.2 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. இந்நிலையில், நேற்று 110.48 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. இன்று அக்னி வெயில் தொடங்குவதால் மக்கள் மேலும் கவலையடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று(மே – 03) மாவட்டத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவர உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. வள்ளியூர் மற்றும் பாளையில் உள்ள 2 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது. அனைத்து விடைத்தாள்கள் நேற்று திருத்தி முடிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 800 ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
தருமபுரி நான்கு ரோடு பழைய தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து காவலர்கள் நேற்று(மே 3) தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்டேட் வங்கி முன்பு போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 30 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கர ஸ்ரீ அனுக்கை கணபதி ஸ்ரீ சுரேஷ்வராச்சாரியார் சந்திதி ஆகியவற்றுக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் நேற்று(மே 3) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த 3 சந்நிதிகளுக்கும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பா பிஷேகத்தையொட்டி காலை பூஜைகள், அனுக்கை விக்னேஸ்வா பூஜையுடன் தொடங்கியது.
Sorry, no posts matched your criteria.