India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலுப்பூர் அருகே உள்ள குரும்பப்பட்டி கண்மாய் பகுதியில் பொதுஇடத்தில் சூதாட்டம் விளையாடுவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் இன்று அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த குரும்பப்பட்டியை சேர்ந்த மகேந்திரன், மகேஸ்வரன்,நாகராஜ், சுப்பிரமணி ஆகிய 4 பேரை கைது செய்தனர்
நெமிலி தாலுகா நாகவேடு கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா. இவரது மருமகன் மதன். இவர்களுக்கிடையே நேற்று(மே 3) இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது சுசிலாவை மதன் கத்தியால் குத்தியுள்ளார். தடுக்க வந்த அதே ஊரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் சுசீலாவின் இன்னொரு மகளான ரோஜா ஆகியோரையும் மதன் குத்தியுள்ளார். மதனை கிராம மக்கள் பிடித்து கட்டிப்போட்டு, காயமடைந்த 3 பேரையும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பெரம்பலூர் முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில் நேற்று(மே 3) மாவட்ட அரிமா சங்கம் சார்பில் தலைவர் பாபு தலைமையில் சாசன தலைவர் இராஜாராம் முன்னிலையில் 5 ஜோடி மணமக்களுக்கு கூட்டு திருமண விழா நடைபெறுகிறது. பெரம்பலூர் ரோவர் கல்வி குழும தலைவர் வரதராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அரிமா சங்கம் செயலாளர்கள் சிவராஜ், சுப்ரமணியன், பொருளாளர் காசி விஸ்வநாதன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடி அருகே வளையம்பட்டு பகுதியைச் சேர்ந்த சங்கர்(35). இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இல்லாத ஏக்கத்தில் வளையம்பட்டு – வாணியம்பாடி ரயில் நிலையம் இடையே இன்று அதிகாலை தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு செல்ல 3 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மன்னுவனூர் , பூம்பாறை பகுதிகளில் பற்றி எரிந்த காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் மேல்மலை கிராமங்களுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது. காட்டுத் தீ பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த மாமண்டூர் பகுதியில் நேற்று(மே 3) இரவு 11 மணியளவில் காஞ்சிபுரம் பல்லவர் நகர் பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து ஊழியர் சீனிவாசன் மற்றும் அவரின் மனைவி மஞ்சுளா இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கனரக வாகனம் நேருக்கு நேர் மோதியதில் தம்பதியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
புதுவை ஜவகர் பால்பவன் கோடை வகுப்புகளில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்தனர்.
இந்தாண்டு அரசு பள்ளிகளின் விடுமுறை காலம் மே முதல் தேதி இருந்து துவங்கியதால், கோடை கொண்டாட்ட வகுப்புகள் நேற்று முதல் துவங்கி 30 நாட்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. நேற்று காலை ஐந்து இடங்களில் சேர்க்கை நடந்தது. இதனால் பால்பவனில் பெற்றோர்கள் கூட்டம் அலை மோதியது.
கர்நாடகா மாநிலம் தபுனகிரே மாவட்டம் உள்ளிக்கட்டையை சேர்ந்தவர் ராகுல் (30). இவர் திருச்சியில் பாலிஷ் போடும் வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்வதற்காக ரயில் மூலம் அதிகாலை சென்றுள்ளார். அப்போது குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் அருகே மயக்கம் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
மயிலம் அடுத்த வீடூர் கிராமத்தில் நேற்று (மே 3) தீமிதி திருவிழா நடைபெற்றது. வீடூர் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் பதினெட்டாம் நாள் பாரதப் போர் முடிந்து 19ஆம் நாள் அம்மன் கூந்தல் அள்ளி முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு ஏற்படுத்தப்பட்டிருந்த தீயில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இறங்கி அம்மனுக்கு வேண்டுதலை செலுத்தினர்.
சித்தநாயக்கன்பாளையத்தில் நேற்று பொதுக் குழாயில் குடிநீர் பிடித்த பொதுமக்களை திமுகவினர் தாக்கினர். சித்தநாயக்கன்பாளையத்தில்
பொதுக்குழாயில் பொதுமக்கள் குடிநீர் பிடிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திமுகவைச் சேர்ந்த ஒரு சிலர் வரிசையில் நிற்காமல் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கே நின்று கொண்டிருந்த பொது மக்களையும் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.