India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலை ஏற்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூரில் கடல் அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா ஊத்துக்குளியை சேர்ந்தவர் வடிவேல்(25), கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்து வருகிறார். இவர் 30 வயதான தனது உறவுக்கார பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பின்னர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் வடிவேலை நேற்று(மே 3) போலீசார் கைது செய்தனர்.
அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலை ஏற்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலை ஏற்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுர மாவட்டத்தில் கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு நாளை (மே 5) நடைபெறவுள்ளது. இத்தேர்வுகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறும் வேலூர் , காட்பாடி, கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 9 தேர்வு மையங்களில் மொத்தம் 5266 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று தனது தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையிலுள்ள ரத்தினகிரி என்னும் மலையின் மீது அமைந்துள்ளது பாலமுருகன் கோயில். இக்கோயிலில் முருகன் திருக்குலாம், குருகோலம் ஆகிய இரு கோலங்களில் காட்சித்தருகிறார். 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் சோழர்கால சிற்பக்கலை வடிவில் கற்பக்கிரகம் கிரானைட் கற்கலால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பே அர்ச்சனைகள் அனைத்தும் தமிழில் செய்யப்படுவதே.
கம்பத்தில் இறைவி சம்ஸ்கிருத நுண்கலைப்பள்ளி சாா்பில் திருநாவுக்கரசர் குருபூஜை, சதிா் சலங்கை விழா நேற்று (மே.3) நடைபெற்றது. இதில் பங்கேற்ற மதுரை ஆதீனம், சலங்கை பூஜை மாணவியர்களை வாழ்த்திக் கலையும், கலாச்சாரமும் வளர்ப்பதற்கு மாணவா்கள், பெற்றோா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா். மேலும் அவர் செய்தியாளர்களிடம், மீண்டும் நரேந்திர மோடிதான் மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராவார் என்றார்.
கொடுவிலார்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன். சிவலிங்க நாயக்கன்பட்டி விளக்கு அருகே உள்ள 22 வருடங்களாக அவருக்கு சொந்தமான நிலத்திற்கு வேலி அமைக்க முற்பட்டார். அப்போது கொடுவிலார்பட்டியை சேர்ந்த காந்தி, ரேவதி, மகாலட்சுமி ஆகியோர் அது தங்களது நிலம் என்று கூறி வேல்முருகனை கல்லால் அடித்து கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றனர். வேல்முருகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜெயக்குமார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் தங்களது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருவதாகவும், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் புகார் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரையில் இயங்குவதற்காக 133 டவுன் பேருந்து உட்பட 213 புதிய பேருந்துகள் தயாராகி வருவதாக அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த நிதி ஆண்டில் 350 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 137 புதிய பஸ்கள் இயங்கி வருவதாகவும்,மேலும் 213 புதிய பேருந்து வடிவமைக்கப்பட்டு வருவதால் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றார்
Sorry, no posts matched your criteria.