India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கீழ் நல்லாத்தூரில் உள்ள திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் பசுபதியின் வீட்டிற்கு ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களில் போலீசார் சென்று அவரை கைதுசெய்தனர். திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பசுபதியை அடைத்துவைத்துள்ளனர். வடலூர் மெய்ஞானபுரம் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக கைதுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் ஈரோடு மாவட்ட, தாலுகா வாரியாக பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
புதுக்கோட்டை கீரனூா் அருகே ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா். பாலகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பையா இவா், கீரனூா் அருகே கிருஷ்ணபாரப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தாா். சென்னை- காரைக்குடி பல்லவன் ரயில் மோதி அவா் இறந்தாா். இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீஸாரும், கீரனூா் காவல் நிலைய போலீஸாரும் விசாரித்து வருகின்றனா்.
கடையம் ராமலிங்கபுரத்தை சேர்ந்த முத்து (47) என்பவர் இரவணசமுத்திரம் இரயில்வே கேட் மேல்புறம் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது ஹெட் லைட் வேலை செய்யாமல் இருந்த இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் ஓட்டி வந்து மோதியதில் முத்து
சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடி பலியானார். பலியானவரின் உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்தவர் காயம்.
அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலை ஏற்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் கடல் அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எட்டயபுரம் அருகே வெள்ளையம்மாள்புரம் சேர்ந்தவர் லட்சுமி பிரியா.வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் விஜயா. உறவினர்களான இவர்கள் இருவரும் நேற்று இரவு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர்.எட்டையபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது,மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கார்,இவர்களது வாகனம் மீது மோதியது.பலத்த காயம் அடைந்த 2 பேரும், அரசு மருத்துவமனையில் செத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயா இறந்தார்.
கிருஷ்ணகிரியில் பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆண்டுதோறும் நடத்தப்படும் மாங்கனி கண்காட்சி இந்தாண்டு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு தலைமையில் நடைபெற்றது. இதில், மா விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் சரயு வழங்கினார்.
மதுரை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜெயராம பாண்டியன் நேற்று விடுத்த அறிக்கையில், ரோஸ் மில்க் குளிர்பானத்தில் எரித்ரோமைசின் , கார்மோய்சைன் , பான்சீ 4 ஆர் போன்ற நிறமிகள் குறிப்பிட்ட அளவு சேர்க்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதேபோல ‘ரோடமைன் பி, பாஸ்ட் ரெட்’ நிறமிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்துவது தெரிந்தால் கடைக்கு ‘சீல்’ வைப்பதோடு அபராதம் விதிக்கப்படும் என்றார்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் கே.பி.கே.ஜெயக்குமார். இவர் தனக்கு கொலை மிரட்டல் அடிக்கடி வருவதாக நெல்லை எஸ்பியிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்த நிலையில் உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள இவரது தோட்டத்தில் இன்று காலை (மே 4) எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் சவகர் சிறுவர் மன்றத்தின் சார்பில், கோடைகால கலை பயிற்சி முகாம் நாளை முதல் வரும் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஓவியம், பரதம், பாட்டு மற்றும் சிலம்பம் ஆகியவை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள 98425 96563 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.