Tamilnadu

News May 4, 2024

மாநகரில் தண்ணீர் தட்டுபாடு, ஆணையரிடம் மனு

image

கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தனியார் நிறுவனங்கள் மூலம் நடைபெறும் குடிநீர் விற்பனை அதிகரித்து வருகிறது.
கோவை மாநகரில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு, நீக்கி தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகர ஆணையரிடம் மனு அளித்தனர்.

News May 4, 2024

ரேசன் அரிசி கடத்தலுக்கு புகார் செய்யலாம்

image

நாகை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார்கள் மற்றும் தகவல்களை தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950க்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தரலாம். 94982 11989 என்ற எண்ணிற்கும் புகார் தரலாம் என நாகை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

News May 4, 2024

சிசிடிவி கேமராக்கள் மூலம் விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை CCVT கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, நேரில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் இருந்தார்.

News May 4, 2024

சிவகங்கையின் ஆயிரம் ஜன்னல் வீடு அம்சங்கங்கள்!

image

சிவகங்கையில் செட்டிநாட்டுப் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய செட்டிநாட்டு வீடுகளில் ஒன்றாகும். பாரம்பரியம் மிக்க நகரமாக அறிவிக்கட்ட காரைக்குடி பகுதிக்கு உரித்தான சுண்ணாம்பு கற்களை பயன்படுத்தி கட்டபட்டுள்ளது. இந்த வீடு 20,000 சதுர அடியில், 25 பெரிய அறை, 5 கூடங்களுடன் அமைந்துள்ளது. 1000 சன்னல் கதவுகளுடன் இவ்வீடு கட்டப்பட்டுள்ளது. வீட்டின் பிரதான வாசல் கதவின் சாவி கிட்டத்தட்ட 1 அடி நீளமுள்ளது.

News May 4, 2024

சடலமாக மீட்கப்பட்ட தலைவர்: வைரல் கடிதம்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான சம்பவம் இன்று நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மேலும் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது அவர் எழுதிய கடிதம் ஒன்று வைரலாகி வருகின்றது.

News May 4, 2024

நெல்லை விரைகிறார் காங். மாநிலத் தலைவர்

image

திருநெல்வேலியை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இன்று (மே 4) காலை அவரது சொந்த ஊரில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து கேள்விப்பட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். தான் உடனடியாக நெல்லைக்கு செல்வதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

News May 4, 2024

சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்

image

மன்னார்குடி மாநில நெடுஞ்சாலையில் முதல் கட்டமாக அரசு மருத்துவமனை முதல் கீழப்பாலம் வரை 1200 மீ தூரத்திற்கு சுமார் 3.20  கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அகலப்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏழு மீட்டர் அகலமுள்ள சாலை 10 மீட்டர் அகலமாக மாற்றபடுவதன் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என உதவி கோட்ட பொறியாளர் ஜெயராமன் தெரிவித்தார்.

News May 4, 2024

திண்டுக்கல்: சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது!

image

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பகுதியில், 4 வயது சிறுமியிடம் விருவீடு பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து(35) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். புகாரின் பேரில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 4, 2024

கரூர் : லாட்டரி சீட்டு விற்றவர் கைது

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா தேவசிங்கம்பட்டியை சேர்ந்தவர் கருப்பன் மகன் நாகராஜன் (55) இவர் தனது வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற நாகராஜன் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 5 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

News May 4, 2024

நெல்லை: நாளை முழு அடைப்பு

image

வணிகர் தினம் நாளை (மே 5) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், திருநெல்வேலி டவுன் போஸ் மார்க்கெட் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் அனைத்திற்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது. நாளை முழுவதும் கடைகள் இயங்காது என இன்று கடைகள் முன் வியாபாரிகள் அறிவிப்பு நோட்டீஸ் வைத்துள்ளனர்.

error: Content is protected !!