Tamilnadu

News May 5, 2024

கொளுந்தும் வெயிலால் மின்தடை: மக்கள் தவிப்பு

image

மதுரை மண்டலத்துக்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் மாவட்டங்களில் நகா்ப் பகுதிகளில், மிகையான பயன்பாடு காரணமாக மின்மாற்றிகளில் பழுது ஏற்பட்டு மின் தடை ஏற்படுகிறது. சராசரியாக சுமாா் 15 நிமிஷம் முதல் 30 நிமிஷங்கள் வரை இந்த மின் தடை நீடிக்கிறது. கடந்த 15 நாள்களில் அதிகபட்சமாக திருமங்கலத்தில் கடந்த 2-ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணி முதல் 3.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது.

News May 5, 2024

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி

image

நீலகிரி மாவட்டம் கால்பந்து கழகம் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நேற்ற நடைபெற்ற மாவட்ட அளவிலான ‘பி. டிவிஷன் பிரிவு கால்பந்து போட்டியில் கோத்தகிரி ரிவர்சைடு கால்பந்து அணி மற்றும் கூடலூர் பிதர்காடு கால் பந்து அணிகள் பங்கேற்று விளையாடின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிதர்காடு கால் பந்து அணி 2-0 என்கிற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

News May 5, 2024

சவுக்கு சங்கருக்கு வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

image

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல் துறை உயர் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் நேற்று அவரை தேனியில் வைத்து கோவை போலீசார் கைது செய்து பலத்த பாதுகாப்புடன் கோவை ஜே.எம்.1 வது நீதிமன்றத்தில் நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

News May 5, 2024

சமூக ஆர்வலர் பொருளுதவி

image

வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்த சுந்தரி சிதிலமடைந்த குடிசையில் வாடகைக்கு வசிக்கிறார். இவருக்கு மாற்றுத்திறனாளி மகன் மற்றும் மகள் ஒருவர் இருக்கின்றனர். இவருக்கு எந்த ஒரு அரசு நிவாரணமும் கிடைப்பதில்லை. இதையறிந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் அவர்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார். மேலும் அந்த குடும்பத்திற்கு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி பென்ஷன், தங்க வீடு அரசு வழங்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

News May 5, 2024

விருதுநகர் அருகே பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

image

தாயில்பட்டி அருகேயுள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கணித பேராசிரியர் ராம் குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி தாளாளர் பிருந்தா ராகவன் நிர்வாக உரையாற்றினார். பெற்றோர்,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உள்ள உறவை பற்றியும் பெற்றோர்களை மதிப்பது குறித்து விளக்கப்பட்டது

News May 5, 2024

திருச்சி:தண்ணீர், ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் விநியோகம்

image

திருச்சிராப்பள்ளி ரயில்வே நிலையத்தில் நேற்று பயணிகளுக்கு தண்ணீர் மற்றும் ஓ ஆர் எஸ் பாக்கெட்டுகளை வழங்க PF 5/TPJ இல் ஹைட்ரேஷன் ஹெல்ப் டெஸ்க் அமைப்பை
சேர்ந்த பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் 19 கேடட்கள் வணிக ஊழியர்களுடன் சேர்ந்து 16848 SCT-MV விரைவு வண்டியில் கிட்டத்தட்ட 350 பயணிகளுக்கு தண்ணீர் மற்றும் ஓ ஆர் எஸ் பாக்கெட்டுகளை வழங்கினர்.

News May 5, 2024

சாராயம் விற்ற மூதாட்டி கைது

image

வாலாஜா தாலுகா தகரகுப்பம் அடுத்த ஒட்டனேரி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக சோளிங்கர் போலீசாருக்கு தொடர்ந்து புகார் சென்றது. நேற்று சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் அப்பகுதியில் திடீர் ரெய்டு நடத்திய போது அதே பகுதியைச் சேர்ந்த விஜயா( 60) என்பவர் வீட்டில் 18 லிட்டர் கள்ள சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

News May 5, 2024

முதியவர் மீட்டு சிறப்பு இல்லத்தில் சேர்ப்பு

image

பெரம்பலூர் வட்டம், துறைமங்கலம் தீரன் நகர் பகுதியில் சுமார் 75 வயதுடைய பெயர் மற்றும் முகவரியையும் சரியாக சொல்ல தெரியாத ஆதரவற்ற முதியவர் ஒருவரை நேற்று மாவட்ட சமூக நலத்துறை மூலம் மீட்டு
பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் மற்றும் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன், ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்ல நிர்வாகி அருண் ஆப்ரஹாம்,
உதிரம் நாகராஜ், மகேஸ்குமரன் ஆகியோர் உதவியுடன் சிறப்பு இல்லத்தில் சேர்த்தனர்.

News May 5, 2024

தென்காசி:இரவிலும் குளிர்பான விற்பனை அமோகம்

image

ஆலங்குளம் வட்டாரத்தில் கோடை வெயில் கடுமையாக கொளுத்துகிறது. இதனால் பகல் நேரங்களில் பதநீர், நுங்கு, இளநீர், கரும்பு சாறு ஐஸ் சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இரவிலும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் இரவு நேரங்களிலும் குளிர்பானம் பருக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் இரவிலும் இதன் விற்பனை களை கட்டியுள்ளது.

News May 5, 2024

புதுச்சேரியில் பிரபல நட்சத்திரங்கள் கிரிக்கெட் போட்டி

image

புதுச்சேரியில் கோடை விடுமுறையை முன்னிட்டு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற பொழுது போக்கு ஒரு நாள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துத்திப்பட்டு சி.ஏ.பி. சீக்கெம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களான ம.க.ப. ஆனந்த், தங்கதுரை, புகழ் மற்றும் பிரபலமான யூடியூப்பர்ஸ் பங்கேற்றனர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

error: Content is protected !!