Tamilnadu

News May 5, 2024

குமரியில் நீட் தேர்வு சிறப்பு ஏற்பாடு

image

குமரி மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 5196 மாணவ மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர். இந்த வகையில் நீட் தேர்வு மையங்களுக்கு மாணவ மாணவிகள் சிரமம் இல்லாமல் செல்வதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி நீட் தேர்வு மையங்கள் ஒவ்வொரு பாயிண்டிலும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

News May 5, 2024

புதுச்சேரியில் புதிதாக உருவாகும் ஈபிள் டவர்

image

புதுவை பாண்டி மெரினாவிலும் தற்போது ‘ஈபிள் டவர்’ அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுமார் 55 அடி உயரத்தில் ஈபிள் டவர் இரும்பினால் அமைக்கப்படுகிறது. இதற்காக 5 அடி உயரம் கொண்ட பீடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ‘கேக்’ வெட்டி கொண்டாடுவதற்கு வசதிகளும் செய்யப்பட உள்ளது. இதற்காக சிறிய தொகை கட்டணமாக வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News May 5, 2024

அரசு விளையாட்டு விடுதிக்கு மாணாக்கர் தேர்வு

image

வரும் 2024- 2025 கல்வி ஆண்டில் 7, 8, 9, +1 மாணாக்கர் அரசு விளையாட்டு விடுதியில் சேருவதற்கான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபடி, கையுந்து பந்து, ஆடவர் கிரிக்கெட், நீச்சல் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி – சேதுபதி விளையாட்டரங்கில் ஆடவருக்கு மே.10 காலை 7 மணியளவிலும் , மகளிருக்கு மே.11 காலை 7 மணியளவிலும் தேர்வு நடைபெறவுள்ளது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News May 5, 2024

மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்

image

தூத்துக்குடி கிருபை நகரை சேர்ந்தவர் சந்தன மாரியம்மாள். இவரது கணவன் பாலமுருகன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட நேற்று இரவு சந்தன மாரியம்மாளை பாலமுருகன், அவரது உறவினர் காளிமுத்து ஆகியோர்  வெட்டி கொலை செய்து காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.

News May 5, 2024

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஏழு குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட எஸ் பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News May 5, 2024

கேரம் விளையாட்டுக்கு அழைப்பு

image

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கோடை கால பயிற்சி முகாம் ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளியில் நாளை மறுதினம் (மே.7) முதல் மே 22 வரை நடைபெறுகிறது.
இதில் 21 வயதிற்குட்பட்டோர் ‘ஸ்டைகர் ‘ உடன் வந்து பங்கேற்கலாம். பயிற்சியின் இறுதியில் ஒற்றையர் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். விபரங்களுக்கு 97860 61985, 78457 89569 தொடர்பு கொள்ளலாம் என செயலாளர் ஆல்வின் செல்வகுமார் கேட்டுள்ளார்.

News May 5, 2024

1000 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பலத்த சூறாவளிக் காற்றோடு மழை பெய்தது. சூறாவளிக் காற்றில் 1000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து முற்றிலும் சேதமானது. 1000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் கவவை அடைந்துள்ளனர்.

News May 5, 2024

செயற்கையாக பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல்

image

பள்ளப்பட்டி குடோன்களில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி முனியராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று மாம்பழம் மற்றும் வாழைப்பழ குடோன்களில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சந்தைப்பேட்டை பகுதி பழக் குடோன்களில் மருந்து தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 40 கிலோ மாம்பழங்கள், 500 கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல் செய்து உரக்கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.

News May 5, 2024

திருவாரூர் ஆட்சியர் தகவல்

image

2024-25 ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகளில் சேர்க்கைக்கு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 7,8,9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் சேர மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 10,11 தேதிகளில் திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு முன் வரும் 8 ஆம் தேதிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையத்தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News May 5, 2024

ஏற்காடு சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை

image

சேலம் ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததின் எதிரொலியாக, அடிவாரத்தில் உள்ள சோதனைச்சாவடியில் இன்று (மே.05) சுற்றுலா வாகனங்களை நிறுத்தி காவல்துறையினர் தீவிர சோதனை செய்தனர். அதில் ஓட்டுநர்களின் அனுபவம், வாகனங்களின் பராமரிப்பு உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே அனுப்பி வருகின்றனர்.

error: Content is protected !!