India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் உதகை தட்சிணாமூர்த்தி திருமடம் மடாதிபதி தெரிவித்த தகவல்:-
உதகை, காந்தல் காசி விசுவநாதர் திருக்கோயிலுக்கு ஆகம விதிகளின்படி பயிற்சி பெற்ற இரண்டு அர்ச்சகர்கள் , இரண்டு பெண் துப்புறவு பணியாளர்கள் மற்றும் ஒரு இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 03.06.2024 என்று கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள ஷேக்உசேன்பேட்டையில் இன்று சாகுல் அமீது என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து சாகுல் அமீது அளித்த புகாரின் பேரில் எடைக்கல் காவல் நிலையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி தேவமாநகரை சேர்ந்தவர் வினோத்-அன்னலட்சுமி. இவர்களது மகன் காசிக் ராஜேந்திரா (4) தனியார் பள்ளியில் யுகேஜி படித்துவந்த நிலையில், தனது அறிவுத்திறனை பயன்படுத்தி கவிஞர்கள் எழுதிய 70 கவிதைகளின் பெயர்கள், 27 விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பெயர்கள், 50 நாடுகள் அவற்றின் நாணயங்கள் உள்ளிட்ட 213 கேள்விகளுக்கு பதில் அளித்து ட்ரம்ப் வேர்ல்ட் ரெக்கார்ட் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகிறது.
www.tnresults.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
மாணவர்கள் பதிவு செய்த செல்போனுக்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும். நெல்லையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி இன்று( மே 5) தெரிவித்தார்.
கோவை, வடவள்ளி இடையர்பாளையத்தை சேர்ந்த கணேஷ் குமார், கீதா தம்பதியின் மகள் ஷன்வித்தா ஸ்ரீ(6). ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே தமிழ் எழுத்துக்கள் மீது ஆர்வம் கொண்ட சிறுமி ஆங்கில தட்டச்சு கொண்ட மடிக்கணினியில் தமிழ் எழுத்துக்களை டைப் செய்து வந்துள்ளார். ஆர்வத்தை கண்ட பெற்றோர் கொடுத்த பயிற்சியில் 50 தமிழ் எழுத்துக்களை 24 விநாடிகளில் டைப் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
சோளிங்கர், புலிவலம் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள வித்யா பீடம் பள்ளியில் நீட் தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சோளிங்கர் வட்டாட்சியர் ஆனந்தன் இன்று ஆய்வு செய்தார். மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என்றும் பார்வையிட்டார்.
திண்டுக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், “தடை செய்யப்பட்ட தலைக்குத்து அருவி, புல்லாவெளி குளிக்க, போட்டோ எடுக்க கூடாது. மாவட்டத்தில் உள்ள வனச்சரக பகுதியில் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. உடைந்த பாட்டில்கள், மதுபானம் அருந்துவது பாேன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள பர்னிச்சர் கடையின் குடோனில் இன்று 12 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டில், டைனிங் டேபிள் சோபா, ஃபர்னிச்சர் வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இடத்திற்கு விரைந்து வந்த, தீயணைப்புத் துறை 2 மணி போராடி தீயை அனைத்து வந்தனர்.
அருப்புக்கோட்டை அன்பு நகரை சேர்ந்தவர் நல்ல கருங்கண் (29).இவர் அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் காட்டுப் பகுதியில் கிடை அமைத்து அதில் ஆடுகளை கட்டி மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.இந்நிலையில் இந்தக் கிடையில் திடீரென தீ பிடித்து கிடையில் இருந்து 30 குட்டி ஆடுகள் தீயில் எரிந்து கருகி உயிரிழந்தன.இதுகுறித்து நல்ல கருங்கண் புகாரின் பேரில் டவுன் போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மாலை 6.30 மணி வரை இடி, மின்னலுடன் மிதமானக் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.