India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழைக்கான வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 93.2 டிகிரி, இரவு வெப்பம் 73.4 டிகிரி அளவுகளில் காணப்படும். தென்மேற்கில் இருந்து மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அம்பை அடுத்த வி.கே.புரம் டாணா பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ரவிக்குமாருக்கு சொந்தமான அசல் உயில் பத்திரம் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்ததை துரிதமாக கண்டுபிடித்துக் கொடுத்து ஊனமுற்றோர் வாழ்வில் ஒளி விளக்கேற்றி வைத்த விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் சுர்ஜித் ஆனந்த், உறுதுணையாக இருந்த எஸ்ஐ ஆறுமுகம் மற்றும் காவல் துறையினருக்கு அவரது குடும்பம் சார்பில் இன்று நன்றி தெரிவித்தனர்.
திருவண்ணாமலையில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை தங்களது வீடு, தங்கும் விடுதி, ஆசிரமம், போன்ற வளாகங்களில் தங்க வைப்பதற்கு C-FORM கட்டாயம். தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது. பிரத்யேக இணையதள முகவரியின் பயனாளர் அடையாள எண்ணை தி.மலை மாவட்டக் காவல் அலுவலகத்தில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மின்வாரிய உதவி பொறியாளர் ராஜமனோகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(ஜீன் 12) ஈச்சங்கோட்டை, மருங்குளம், நடுவூர், சூரியம்பட்டி, வேங்குராயன்குடிகாடு, வடக்கூர், கொல்லங்கரை, சாமிப்பட்டி, பாச்சூர், துறையூர், செல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை காவல் சரக பகுதியில் 16 வயது சிறுமியை உதயகுமார் என்பவர் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் உடனடியாக ரஞ்சித் என்பவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தில் உதயகுமார் , ரஞ்சித் ஆகிய இருவரை இன்று(ஜூன் 11) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பூந்தமல்லி, லட்சுமி நகரில் திரைப்பட இயக்குநர் கண்ணன் (54) என்பவருக்கு சொந்தமான 1038 சதுரடி நிலத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்பு, ரூ.14 லட்சம் பணம் கொடுப்பதாகக் கூறி அவரது மைத்துனர் சென்னையை அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகார்த்தி (43) என்பவர் ஏமாற்றியுள்ளார். புகாரின்பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்த ஜெய கார்த்தியை நேற்றிரவு கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்சக்ஷா பதக்க விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெற விருப்பமுள்ளவர்கள் awards.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.6.2024 ஆகும். மேலும் விபரங்களுக்கு இளைஞர் நலன் அலுவலரை 74017- 03516 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்படலாம் என ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லுார் குளம், என 9 குளங்கள் உள்ளன. குளம் உட்பட பெரும்பாலான குளங்கள், ஆகாய தாமரையின் பிடியில் சிக்கியுள்ளன மாநகரின் நீராதாரத்தை அதிகரிக்கச் செய்யும் குளங்கள் அத்தனையும், ஆகாயத்தாமரையின் பிடியில் சிக்கியுள்ளன இந்த நிலையில் நேற்று குளங்களில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் துவங்கியது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் நேற்று கடலூர் 37 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இக்கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள 3 பெரிய உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம்(ஜூன் 10) நடந்தது. இதில் ரூ.9 லட்சத்து 48 ஆயிரத்து 100 வசூலாகி இருந்தது. 5 சவரன் தங்க நகைகளும் காணிக்கையாக கிடைத்தன.
Sorry, no posts matched your criteria.