Tamilnadu

News June 14, 2024

சேலத்தில் இன்றைய வெப்ப நிலவரம்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.14) மாவட்டத்தில் அதிகபட்சமாக 95.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News June 14, 2024

மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள்

image

மாநில அளவிலான ஹாக்கி லீக் போட்டி ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக மாவட்ட அளவிலான போட்டிகள் கோவில்பட்டியில் ஜீலை.6, 7 ஆம் தேதியில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 38 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கலந்து கொள்ள விருப்பமுள்ள அணிகள் ஜூலை 1 ஆம் தேதிக்குள் 94870 49966 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News June 14, 2024

தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு

image

பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. இதில், ஆர்வமுள்ளவர்கள் <>https://pmfme.mofpi.gov.in/pmfme/#/Home-Page<<>> என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8925533977, 8925533978 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் இதுவரை ஐந்து சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த அக்னி ஆழ்வார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மராஜன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூர் முகமது, நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ரமேஷ், திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

News June 14, 2024

கடலூர்: அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

image

கடலூரில் இன்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் வருகிற செவ்வாய்கிழமைக்கு பிறகு தமிழகத்தில் ஓடினால் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும். மீண்டும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களாக மாற்றும் வரை பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்படாது என்றார்.

News June 14, 2024

அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வு – ஆட்சியர் தகவல்

image

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு ஜூன் 7 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு சிவகங்கை மாவட்டத்தில் திருமணமாகாத ஆண் மற்றும் பெண் https://agnipathvayu.cdac.in  என்ற இணையதளம் மூலம்  
ஜூலை 8 முதல் ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு, 18.10.2024 முதல் ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

News June 14, 2024

தூத்துக்குடியில் பி.டி.ஓ க்கள் இடம் மாற்றம்

image

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த சித்தார்த்தன் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News June 14, 2024

திருச்சியில் 4705 பேர் தேர்வு எழுத உள்ளனர்

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடைபெற, உள்ள சிவில் சர்வீசஸ் எக்ஸாமினேஷன்ஸ் வரும் ஜூன்.14ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. மேற்படி, திருச்சியில் 12 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வினை மொத்தம் 4705 தேர்வுகள் எழுத உள்ளனர். மேலும் 12 தேர்வு கூட மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

திருச்சி பிரபல ஹோட்டலை கையகப்படுத்த தடை

image

திருச்சி எஸ்ஆர். எம் ஹோட்டல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ‘ஹோட்டலை அரசு கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என வழக்கு தொடரப்பட்டது. எஸ்.ஆர்.எம் ஹோட்டல் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, ‘ஜூன்.18ஆம் தேதி செவரை ஹோட்டலை கையகப்படுத்தக் கூடாது’ என உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை அடுத்து பாஜக ஐஜேகே கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

News June 14, 2024

திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய வெளிநாட்டு கரன்சிகள்

image

திருச்சி விமான நிலையத்தில் இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியிடம் சோதனை செய்யும் போது ரூ.16,75,000 மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!