Tamilnadu

News June 14, 2024

11 முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளுடன் சிறப்பு ரயில்

image

வார இறுதி விடுமுறை காலக் கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053) ஜூன் 14 மற்றும் 16 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். இந்த சிறப்பு ரயிலில் 11 முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

News June 14, 2024

தமிழ் பாடத்தில் 100/100 பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

image

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஐம்பெரும் விழா நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற 43 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

News June 14, 2024

பெரம்பலூர் அருகே பாடாலூரில் விபத்து

image

பெரம்பலூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே டிப்பர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக நெடுஞ்சாலை மேல் அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை விழிப்புணர்வு டிஜிட்டல் பலகையில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News June 14, 2024

கடலூர் கோர்ட்டில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆஜர்

image

கடலூரில் கடந்த 2015 ஆம் ஆண்டு மணல் குவாரி மூடும் போராட்டத்தில் நடந்த தடியடி வழக்கில் தொடர்புடைய போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது திமுக மாநகர செயலாளர் ராஜா மற்றும் வழக்கறிஞர் பிரிவு அணியினர் அருகில் இருந்தனர். பின்பு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

News June 14, 2024

நடிகர் கமலிடம் வாழ்த்து பெற்ற குமரி எம்.பி

image

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அமோக வெற்றி பெற்றார். இத்தொகுதியில் இரண்டாவது முறையாக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உடன் இருந்தனர்.

News June 14, 2024

ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி

image

தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் கும்பகோணம் கோட்டத்தில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோ மொபைல் பொறியியல் பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பை முடித்த இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை www.boat-srp.com என்ற இணையதளம் மூலமாக ஜூலை 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 14, 2024

அக்னி வீரர்கள் தேர்வு அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம், அக்னிவீர் வாயு (இந்திய விமானப்படை) தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வு அக்டோபர்18 ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக நடத்தப்பட உள்ளது. ஜூலை 8 முதல் 28ஆம் தேதி வரை http://agbuoatgavayu.cdac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பயனடைய மாவட்ட ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் அவர்கள வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 14, 2024

சென்னை – நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் ரயில்

image

சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வாராந்திர வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து இப்பகுதியில் வந்தே பாரத் ரயிலை விட மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், வரும் 20ஆம் தேதி பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.  3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் பிரதமர் மோடி, முதல்முறையாக தமிழகம் வருகிறார். 

News June 14, 2024

அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

image

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இன்று (14.06.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அவர்கள் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) கட்டுவதற்கான இடம் தேர்வு குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். உடன் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.

News June 14, 2024

புதுவை: துணைநிலை ஆளுநர் நேரில் ஆய்வு

image

விஷவாயு தாக்கி பாதிக்கப்பட்ட ரெட்டியார் பாளையம் பகுதியில் துணைநிலை ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீரமைப்பு பணி , பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பொதுமக்களிடம் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

error: Content is protected !!