India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திராவில் மே 13 மக்களை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ்நாடு -ஆந்திர மாநில எல்லை பகுதியான குடியாத்தம், மோர்தானா, காட்பாடி எருக்கம்பட்டு, பொன்னை, சேர்க்காடு ஆகிய 5 டாஸ்மாக் கடைகளுக்கு மே மாதம் 11ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மதுபான கடைக்கள் இயங்காது என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று உத்தரவிட்டார். விதிமீறி விற்பனை செய்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் இன்று (மே 7) அரசு பேருந்து மோதியதில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பலியானார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பணகுடி போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் காவல்துறை அதிகாரிகளை தப்பாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார் முன்னாள் அரசு ஊழியரான சவுக்கு சங்கர்.
சங்கர் தேனியில் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டு, தனி வழக்காக பதிவு செய்யப்பட்டது.
அந்த கஞ்சா வழக்கிற்காக, இன்று, மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜராகிறார்.
ராமநாதபுரம் இளமனூரை சேர்ந்தவர் கார்த்திகைராஜ் (56). மலேசியாவில் வேலை பார்த்து வந்தவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது மனைவி சற்குணம் கடந்த 30ஆம் தேதி கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து கார்த்திகைராஜ் உடலை கொண்டுவர கோரி மனு அளித்தார். கலெக்டர் துரித நடவடிக்கை எடுத்து ஒரு வாரத்திற்குள் மலேசியாவில் இருந்து கார்த்திகைராஜின் உடல் கொண்டு வரப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர்.தூத்துக்குடியில் மே.11 இல் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அரியலூரில் மே.10 இல் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மதுரை தனக்கன்குளம் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் இன்று முதல் (மே 8) முதல் 15 வரை பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி துவங்கியுள்ளது. இந்தப் பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். இதில் யோகா பயிற்சியுடன் யோகாவின் பலன்கள் குறித்த இலவச ஆலோசனைகள், இயற்கையான வாழ்வியல் முறை, தியானம், சிறப்பு மூச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். செங்கல்பட்டில் மே.10 இல் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிளஸ் 2 தேர்வில் மதுரை 95.19 சதவீதம் தேர்ச்சி பெற்று கடந்தாண்டை விட 0.65 சதவீதம் தேர்ச்சி சரிவடைந்து மாவட்ட ‘ரேங்க்’கிலும் பின்தங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த அரையாண்டு, இரண்டாம் திருப்புதல் தேர்வுகளில் 80 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி காட்டிய பெரும்பாலான அரசு பள்ளிகளின் பொதுத் தேர்வு தேர்ச்சி கடுமையாக சரிந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா கமலாலயம் தெப்ப குளத்தில் வரும் 22.05.24 (புதன்கிழமை) 23.05.24 (வியாழக்கிழமை) 24.05.24 (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு. முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் அழைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகின்றது.
Sorry, no posts matched your criteria.