Tamilnadu

News May 8, 2024

சிவகங்கை: நகை, பயிர் கடனுக்கு ரூ.1,165 கோடி ஒதுக்கீடு

image

கூட்டுறவுத்துறையின் கீழ் சிவகங்கையில் 32 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 2024 ஏப்.முதல் 2025 மார்ச் வரை அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நகை கடன் வழங்க ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நகை அடமான கடன் வழங்க ரூ.490 கோடி, பயிர் கடன் வழங்க ரூ.200 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

News May 8, 2024

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

image

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து இன்று (மே 8) மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அலுவலர்களுடன் பல்வேறு கலந்துரையாடல் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை ஆட்சியாளர் வழங்கினார். இந்த ஆய்வின்போது போக்குவரத்து அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News May 8, 2024

விளையாடி கொண்டிருந்த மாணவன் உயிரிழப்பு

image

ராணிப்பேட்டை, கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்ற மாணவர் தனது வீட்டின் முன்பு இருந்த இரும்பு குழாயில் நேற்று மாலை கயிறு கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்ரீராமின் கழுத்து சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News May 8, 2024

மின் வயர் அறுந்து விழுந்து 2 மாடுகள் பலி

image

தருமபுரி, காரிமங்கலம் வட்டம், வகுரப்பம்பட்டி தரப்பு, EB மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது 2 பசு மாடுகள் மீது, இன்று(மே 8) பலத்த காற்று அடிக்கும் போது மின் வயர் அறுந்து விழுந்து, மின்சாரம் தாக்கியதில் இரு பசு மாடுகளும் உயிரிழந்தன. இது குறித்து கால்நடை துறையினரும், மின்வாரியத் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 8, 2024

நாகூரில் 110 சவரன் தங்க நகைகள் கொள்ளை

image

நாகூர் நூல்கடைத் தெருவைச் சேர்ந்தவர் தாவூது பாத்திமா நாச்சியார்(62). இவர் கடந்த 3 ஆம் தேதி தனது தாயுடன் வீட்டை பூட்டைவிட்டு நாகூர் புதுமனைதெருவில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சென்று இன்று தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டிலிருந்த 110 சவரன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

News May 8, 2024

திண்டுக்கல்:  வெட்டி கொலை: போராட்டம்

image

நிலக்கோட்டை தாலுகா, நடுப்பட்டி கூலி தொழிலாளி ஆண்டார் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் காரியம்பட்டி , நடுப்பட்டி பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இன்று தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் உண்மையான குற்றவாளியை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் குற்றவாளியை கைது செய்யும் வரை பிரேதத்தை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர். 

News May 8, 2024

விவேகானந்தர் மண்டபத்தை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்

image

தமிழ்நாடு கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் கடல் அலைகள் அதிக உயரத்திற்கு எழும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சிமையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து குமரியில் கடலில் குளிக்கவோ இறங்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. 4வது நாளாக தடை தொடரும் நிலையில், இன்று கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.

News May 8, 2024

கடலூர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

image

நடுவீரப்பட்டு அடுத்த பண்ணை குச்சிப்பாளையம் சேர்ந்தவர் முருகேசன் மனைவி சந்திரா (62). இவர் நேற்று அதே பகுதியில் சாலை ஓரத்தில் நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சந்திரா மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 8, 2024

செட் தேர்வுக்காக இலவச பயிற்சி..!

image

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணிக்கான மாநில தகுதி தேர்வினை (செட்) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கணினி வழியாக ஆன்லைனில் வருகிற ஜூன் 3-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் மே 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தினமும் (ஞாயிறு தவிர) மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை மதுரை, காக்காதோப்பு மூட்டா அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

News May 8, 2024

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் சிறப்பு!

image

கன்னியாகுமரியில் அமைந்துள்ள பகவதியம்மன் கோயில் 108 சக்தி பீடங்களில் ஒன்றாகும். புராணக் கதைகளைக் கொண்ட இக்கோயில் 2000 – 3000 ஆண்டுகள் பழைமையானது. கல் சுவரால் கட்டப்பட்ட இக்கோயிலில், சூரிய தேவன், விநாயகர், ஐயப்பன், பால சுந்தரி மற்றும் விஜய சுந்தரி ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும் உள்ளன. கடலோரத்தில் அமைந்துள்ள இக்கோயில் கன்னியாகுமரியின் பழமையை பறைசாற்றும் விதத்தில் அமைந்திருக்கிறது.

error: Content is protected !!