Tamilnadu

News June 16, 2024

பரமக்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

image

பரமக்குடி 2வது வார்டு புது நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மங்கள விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹாகும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. மங்கள இசையுடன் நேற்று தொடங்கிய கும்பாபிஷேக விழாவானது இன்று காலை 2ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று புனித நீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

News June 16, 2024

பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய அமைச்சர்

image

இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் எல்ஜி எஃப்ஐ தமிழ்நாடு கையுந்து பந்து அணிக்காக 5 பிரிவுகளில் 5 பேர் தேர்வு பெற்றிருந்தனர். மாணவிகளுக்கான தேசிய அளவில் நடந்த கையுந்து போட்டியில் நம்பியூரில் உள்ள குமுதா பள்ளியின் பனிரெண்டாம் வகுப்பு மாணவி எஸ்.ரஞ்சிதா வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். இந்த மாணவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சான்றிதழ் வழங்கினார்.

News June 16, 2024

திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம்

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரை தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

News June 16, 2024

ரூ.80 கோடி அரசு நிலத்தை மீட்க மக்கள் மனு

image

ஆவடி அருகே வெள்ளானூரில் ரூ.80 கோடி மதிப்புள்ள 9 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக தெரிகிறது. இதனை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வேண்டும் என கோரி அப்பகுதி பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஆவடி தாலுகாவில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் புகார் அளித்துள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

News June 16, 2024

“நாய்களின் உளவியல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்”

image

மனித உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வெளிநாட்டு நாய்களை தமிழ்நாட்டில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாய்களை வகைப்படுத்துவது குறித்து மக்கள் கருத்துகளை ஒன்றிய அரசு கோரியது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் “நாய்களின் உளவியல் குறித்தும் அவற்றின் நடத்தை குறித்தும் ஆய்வு செய்த பிறகே அவை ஆக்ரோஷமானவையா , இல்லையா என முடிவெடுக்க வேண்டும்” என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News June 16, 2024

வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

மத்திய குடிமையியல் பணிகளுக்கான முதல் நிலை தேர்வுகள் (யுபிஎஸ்சி) இன்று (ஜூன் 16) நடைபெற்றதையொட்டி தேர்விற்கான பார்வையாளர் சரவணவேல் ராஜ், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி, வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News June 16, 2024

பாராட்டு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்

image

நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தால் விஐடி வேந்தர் முனைவர் கோ விஸ்வநாதனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை பாராட்டும் விதமாக இன்று சைதாப்பேட்டை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு உரையாற்றினார்.

News June 16, 2024

விருதுநகரில் பெண் போலீசுக்கு ஓராண்டு சிறை

image

சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் போலீசாக தீபா பணிபுரிகிறார். விருதுநகர் சூலக்கரை பகுதியில் வசித்து வரும் இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த ஞானமணி என்பவரது குடும்பத்திற்கும் குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறின் போது காவலர் தீபா ஞான மணியை மட்டையால் தாக்கியதில் அவர் காயமடைந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கலை நிலா, காவலர் தீபாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தார்.

News June 16, 2024

ரெஸ்டோ பார்களுக்கு பாஜக அமைச்சர் – எதிர்ப்பு

image

புதுவை துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணனை அமைச்சர் சாய் சரவணகுமார் இன்று சந்தித்து ஊசுடு தொகுதியில் திறக்கப்பட்டுள்ள ரெஸ்டோ பார்களை அகற்ற வேண்டி கோரிக்கை விடுத்தார். கலால்துறை முதல்வர் வசம் உள்ள நிலையில் பாஜக அமைச்சர் முதல்வரின் முறையிடாமல் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளது. இதேபோல் சபாநாயகர், அமைச்சர், எம்எல்ஏ க்கள் கவர்னரை சந்தித்தனர்.

News June 16, 2024

ரூ.2 கோடி கணக்கில் செம்மறி ஆடுகள் விற்பனை

image

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூரில் தர்கா குளம், தெரு பள்ளி, தைக்கால், மனோரா வடபுறம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் செம்மறி ஆடு விற்பனை நடந்து வருகிறது. புதுக்கோட்டை அறந்தாங்கி அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகள் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.2 கோடியே 25 லட்சத்துக்கு விற்பனை ஆகி உள்ளது. இன்று அதிக விற்பனை நடக்கும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!