India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது 2 மகள்களான ஷாலினி, ஷோபனா பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று தனது தந்தையிடம் பேசிய பேசியபோது தந்தை கோபமாக திட்டியதால் சகோதரிகள் இருவரும் தற்கொலை செய்துகொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் நாளை (மே.12) மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் இன்று மஞ்சள் டெண்டர் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரூ.16330 முதல் ரூ.18833 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.15058 முதல் ரூ.17199 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரூ.19482 முதல் ரூ. 26569 வரையிலும் மொத்தம் 1800 மூட்டைகள் தொகை ரூ.1.90 கோடிக்கு விற்பனை ஆனது.
சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகே இன்று காலை தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான கார் ஒன்று திடிரென தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் கார் முழுவதும் பற்றி எரிந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நாளை (மே.12) மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
சில தினங்களாகவே காஞ்சிபுரம் மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடுபோயின. இந்நிலையில் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்த போலீசார் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஒலிமுகம்மதுபேட்டை பகுதியைச் சேர்ந்த தரணிதரன் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து ஏழு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிகளுக்கு மயக்கவியல் துறை பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தளத்தில் புகார் எழுந்தது. இதனையடுத்து விசாக கமிட்டி மற்றும் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமையில் நேற்று கல்லூரி மாணவ – மாணவிகளிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரியில் 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் உங்கள் சாதனையின் அளவுகோல்.
மாணவர்கள் அனைவரும் இதே உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் உயர்கல்வியிலும் வாழ்விலும் கவனம் செலுத்த வேண்டும் என ஆளுநர்
சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீங்கியதால் , தஞ்சாவூர் மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் முதல் ரக பல்லாரி 50 கிலோ கொண்ட மூட்டை 1,200 விற்க்கப்பட்ட நிலையில் தற்போது 1,600 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 1,100 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில் தற்போது 1,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 1 கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.60-க்கு விற்கிறது
கோவை ரயில்வே துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை “லோக்மான்ய திலக் டெர்மினஸ்” ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக, டெல்லி வரை புறப்படும் ரயில் இன்று காலை 8.50 மணிக்கு, புறப்பட வேண்டிய ரயில், சில நிர்வாக காரணங்களால், மதியம் 12 மணிக்கு புறப்பட்டு சென்றது. 3 மணி நேரம் பயணிகள் காத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.