Tamilnadu

News May 12, 2024

நெல்லையில் கோர விபத்து; இருவர் மரணம்

image

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இன்று (மே12) காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணமடைந்தனர். சங்கர்நகர் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் லாரியின் பின்புறம் வேன் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 12, 2024

திருச்சி:காவல் தனி படையினர் ஆயுதபடைக்கு மாற்றம்

image

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவில், தடை செய்யப்பட்ட,லாட்டரி, புகையிலை பொருட்கள், குற்ற சம்பவங்களை கண்காணிக்க SI லியோ ரஞ்சித்குமார் தலைமையில் 4 காவலர்கள் கொண்ட தனி படை அமைக்கப்பட்டு கண்காணித்து வந்தனர்.இத்தனிப்படை மீது பல்வேறு புகார் வந்ததையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அனைவரையும்,நேற்று, மாலை, ஆயுத படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

News May 12, 2024

மயிலாடுதுறையில் மர்ம மரணம் 

image

மயிலாடுதுறையில் புனுகீஸ்வரர் வடக்கு வீதியை சேர்ந்த கண்ணையன் என்பவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை.தொடர்ந்து அருகே உள்ள வீட்டின் மாடியில் கண்ணையன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை போலீசார் இறந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 12, 2024

புதிய மோசடி காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை: மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு போன் செய்து அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் Gpay QR code scan செய்யுமாறு கூறினால் யாரும் நம்பி ஏமாற வேண்டாம். நீங்கள் QR code scan செய்வதன் மூலம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க தென்காசி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

News May 12, 2024

+2 முடித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் +2 முடித்த மாணவ / மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியில் 13.05.2024 காலை நடைபெறுகிறது. இதில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர் கல்வியில் சேர வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

News May 12, 2024

புதுச்சேரி ஆம் ஆத்மியினர் கொண்டாட்டம்

image

மதுபானம் கொள்கையால் கடந்த மாதம் கைது செய்யபட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து, இதை கொண்டாடும் விதமாக நேற்று புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சியின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சாமி சண்முகசுந்தரம், கவுரவ தலைவர் சந்திரன், ஜெயராஜன் , ஜெயக்குமார், கமலா, மகாலட்சுமி, ஜெயா, மற்றும் பலரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்

News May 12, 2024

ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு தடுப்பூசி – மாவட்ட கலெக்டர்.

image

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி சொட்டு மருந்து, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த சிறப்பு முகாம் நாளை (13ம் தேதி) முதல் வரும் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 12, 2024

மே.14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம்

image

கோவையில் இருந்து சென்னை வரை இருக்கும் அனைத்து மாவட்ட மக்களும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே.14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளனது. அடன்படி செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மே.12 அன்று காலை 4.14, இரவு 7.07, மே.13 இல் காலை 5.00, மே.14 இல் காலை 4.15 மணிக்கு காணலாம் என நாசா தெரிவித்துள்ளது.

News May 12, 2024

நாய் பிடிக்க நூறு ரூபாய் வசூல்..!

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா பரவாக்கோட்டை கிராமத்தில் வெறி நாய்கள் பகல் மற்றும் இரவு நேரத்தில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் ஆடு மாடு மற்றும் கோழிகளை கடித்து குதறி வருகின்றன. இதனால் நாயை பிடிக்க ஊராட்சி சார்பில் பொதுமக்களிடம் ரூ.100 வசூல் செய்யப்பட்டதாகவும் ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என இப்பகுதி பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

News May 12, 2024

ரூ.50,000 மதிப்புள்ள கஞ்சா கடத்திய 3 பேர் கைது

image

பவானி புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கோபி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் ரூ.50,000 மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.இதையடுத்து கஞ்சா கடத்திய மதிவாணன் (40), சிவசக்தி (22), லோகநாதன் (25) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!