India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என விரும்புபவர்கள் செவ்வாய்கிழமையில் சிறுவாபுரி முருகன் கோயிலில் வேண்டிக் கொண்டால், அடுத்த ஆண்டு அதே நேரத்திற்குள் அவர்களுக்கு சொந்த வீடு கட்டி முடிக்கும் யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பலரின் சொந்த வீடு கனவை இந்த முருகன் நிறைவேற்றி வைத்துள்ளார். இன்றும் நிறைவேற்றி வைத்து வருவதால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஷேர் பண்ணுங்க
இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை மாற்றுத்திறனாளி பெண் உட்பட 10 நீந்தி கடந்து வந்தனர். மும்பையை சேர்ந்த ஷஸ்ருதி மற்றும் பாலா கணேஷ் இருவரும் மாற்றுத்திறனாளிகள் நேற்று முன்தினம் காலை தலைமன்னார் கடலில் குதித்து நீந்த துவங்கினர். அவர்களுடன் 8 வீரர்களும் நீந்த துவங்கினர். இதில் மாற்றுத்திறனாளி ஷஸ்ருதி 11 மணிநேரமும், பாலா கணேஷ் 10:30 மணிநேரமும் நீந்தி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனர்.
கோவை, காளம்பாளையம், தாயனூர் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(60). இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, பின் மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, புதர் மறைவில் மறைந்திருந்த குட்டியுடன் கூடிய ஒற்றை காட்டு யானை தாக்கியதில் அவர் பலியானார். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குளித்தலை அருகே கே.பேட்டையை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் கிருபானந்தன் பட்டவர்த்தியில் உள்ள தனது நண்பர் தாமு வீட்டில் பித்தளை அண்டா திருடி சென்றதாக அப்பகுதியை சேர்ந்தோர் சரமாரியாக அடித்து தாக்கி அவரிடம் இருந்த செல்போன், பைக்கை பறித்துச் சென்றுள்ளனர். சாந்தி புகாரில் செல்வா, சேது, கௌதம், அழகேசன், கோபால், துரைப்பாண்டி, விக்னேஷ் ஆகிய 7 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
‘அறுபடை வீடு’ சன்னதிகளில் குடி கொண்டிருக்கும் முருகனை இந்த ஒரே கோயிலில் நம் தரிசிக்கலாம். ஒவ்வொரு சுவாமிக்கும் தனி சன்னதி உள்ளது. இந்த கோயில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாக்ஷேத்ரா காலனியில் உள்ளது. ஆறுபடை வீடுகளில் இருந்தும் புனிதத்தன்மை எடுத்து வரப்பட்டு, இங்கு ஒரே இடத்தில் தனித்தனி கோயில்களாக கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆறுபடை முருகனை வழிபட்ட பலனை பெற முடியும். ஷேர் பண்ணுங்க
பெருமாளின் 10 அவதாரங்களை ஒருங்கிணைத்து ஒரே சிலையாக செங்கல்பட்டு திருவடி சூலத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. பெருமாள் இங்கு மச்சம், கூர்மம், வராகம், பரசுராமர், ஸ்ரீ ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என அனைத்து அவதாரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூன்று முகங்கள், 20 கரங்களுடன் பிரம்மாண்டமாக சிலை காணப்படுகிறது. மூலவராக, திருப்பதியில் உள்ளது போன்று, வெங்கடேச பெருமாளாக எழுந்தருளியுள்ளார். ஷேர்
நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆர்டிஓக்கள் தலைமையில், வருகிற 22-ம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் அமானி கொண்டலாம்பட்டி தானங்காடு பகுதியைச் சேர்ந்த தறித்தொழிலாளி கார்த்திக் என்பவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஒரு குறிப்பிட்ட அணி வெற்றி பெறும் என்று ரூ.50,000 பந்தயம் கட்டியுள்ளார். அவர் கட்டிய அணி தோல்வியடைந்ததால் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
▶ஞாயிறு – சிவலோக பதவி கிடைக்கும், நோய்கள் நீங்கும்
▶திங்கள் – பாவ கணக்கு குறைந்து, புண்ணிய கணக்கு மேலோங்கும்
▶செவ்வாய் – கடன் தீரும், தீவினைகள் போகும், வறுமை நீங்கும்
▶புதன் – கலைகளில் நல்ல வளர்ச்சி, மோட்சம் கிடைக்கும்
▶வியாழன் – குரு அருள் கிடைக்கும். ஞான சித்தி ஏற்படும்
▶வெள்ளி – செல்வ நலன் கிடைக்கும், குழந்தை பேறு கிடைக்கும்
▶சனி – பிறவிப் பிணி போகும். வியாபாரத்தில் உச்ச நிலை ஏற்படும்
சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி மகன் ஜித்தன் ரமேஷ் நடிக்கும் போர்கள் ஓய்வதில்லை திரைப்பட பூஜை ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயத்தில் நேற்று காலை நடந்தது. இதில் இருட்டுக்கு கண் இருக்கு உள்பட குறும்பட யூடியூப் நடிகர் மண்டபம் எம் எஸ் ராஜ், அமமுக தலைமை கழக பேச்சாளர் மண்டபம் ராஜா முஹமது உள்பட பலர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.