India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு, நேற்று (ஏப்.18) தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் குழாய் மூலம் வீட்டு சமையல் எரிவாயு வழங்கப்படும் என தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையர் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் கபடி போட்டி வரும் மே.3, 4 ஆகிய தேதிகளில் சோமரசம்பேட்டையில் நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசாக ₹.50,000, 2-ம் பரிசு ₹.30,000, 3-ம் பரிசு ₹.25,000, 4-ம் பரிசு ₹.25,000 வழங்கப்பட உள்ளது. மேலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு சுழற் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள கபடி வீரர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தர்மபுரி நகரில் மதிக்கோன்பாளையம், காமாட்சியம்மன் தெரு, சந்தைப்பேட்டை, உழவர் சந்தை, டேக்கீஸ்பேட்டை, டவுன் போலீஸ் நிலையம், புரோக்கர் ஆபீஸ், வட்டார வளர்ச்சி காலனி, சில்வர் ஸ்பிரிங்ஸ் நகர், 4 ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் வினியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க
மதுரையில் இடத் தகராறு காரணமாகக் கடத்தப்பட்ட தொழிலதிபர் கருமுத்து சுந்தரம் மீட்கப்பட்டார். பீ.பீ குளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஏப்.6 மர்மநபர்களால் கடத்தப்பட்டார். இந்நிலையில் இன்று மதுரை, பாண்டி கோயில் பாலம் அருகே போலீசார் விரட்டி பிடித்து 2 பேரைக் கைது செய்தனர். கடத்தல் தொடர்பாக ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது.
சென்னையில் இன்று தொடங்கிய AC வசதியுடன் கூடிய புறநகர் ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.35, அதிகபட்சமாக ரூ.105 வசூலிக்கப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ரூ.105 டிக்கெட் கட்டணம் ஆகும். சென்னை கடற்கரையில் இருந்து தம்பரத்திற்கு ரூ.85 டிக்கெட் கட்டணம் ஆகும். தாம்பரம் – எழும்பூருக்கு ரூ.60, செங்கல்பட்டு – எழும்பூருக்கு ரூ.85 டிக்கெட் கட்டணம் ஆகும். ஷேர் செய்யுங்கள்.
சென்னையில் முதல்முறையாக AC வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை இன்று (ஏப்ரல் 19) தொடங்கியது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை முதல் AC ரயில் இன்று புறப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணி, பிற்பகல் 3.45 மணி, இரவு 7.35 மணிக்கு இந்த AC ரயில் சேவை இருக்கும். இன்று காலை 7 மணிக்கு புறப்பட்ட AC ரயில் 8.45 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். ஷேர் செய்யுங்கள்
நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ளது அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில். நினைத்ததை வேண்டி சாமிக்கு விளக்கு ஏற்றி சிறப்பு அபிஷேகங்கள் செய்தால் நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். இங்கு வேண்டினால் திருமண பிரச்சனை, குடும்ப பிரச்சனை, கல்வி போன்றவற்றில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. இங்கு சித்திரை பிரமோற்சவம், ஐப்பசி கந்த சஷ்டி போன்ற நாட்கள் மிக சிறப்பான நாட்களாகும். சேர் செய்யவும்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1772ல் முதல் மாவட்டம் சேலம் உருவாக்கப்பட்டு அதற்கு மூன்று கலெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் ஒன்று திருப்பத்தூர் கலெக்டர். இந்தப் பகுதியில் கலெக்டரை நியமித்ததும் அங்கு வந்து செல்லும் ஆங்கிலேயர் தண்ணீருக்காக பொது கிணற்றை நாடி உள்ளனர். ஆனால் தாய் மண்ணின் மீது கொண்ட பாசத்தாலும் ஆங்கிலேயர் மீது இருந்த வெறுப்பாலும் தண்ணீர், உணவு தர திருப்பத்தூர் மக்கள் மறுத்துவிட்டனர். ஷேர்
மானூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட எட்டான்குளம், தெற்கு தெருவை சேர்ந்த கோகுல்(24), முத்து(20), சுடலைமுத்து(18), அந்தோணி ராஜ் (23) ஆகிய 4 பேரும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ மற்றும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் புகைப்படத்தை பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர்.
சென்னையில் இன்று தொடங்கிய AC வசதியுடன் கூடிய புறநகர் ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.35, அதிகபட்சமாக ரூ.105 வசூலிக்கப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ரூ.105 டிக்கெட் கட்டணம் ஆகும். சென்னை கடற்கரையில் இருந்து தம்பரத்திற்கு ரூ.85 டிக்கெட் கட்டணம் ஆகும். தாம்பரம் – எழும்பூருக்கு ரூ.60, செங்கல்பட்டு – எழும்பூருக்கு ரூ.85 டிக்கெட் கட்டணம் ஆகும். ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.