India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➡தாம்பரம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தங்க பெண்களுக்கு ஓய்வு அறை அமைக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி. ➡ செய்யூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.3.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடு. ➡மாமல்லபுரத்தில் ரூ.30 கோடி செலவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று அறிவிப்பு.
விருதுநகர் மாவட்டத்தில் 4 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதில் நரிக்குடி மறையூர் சத்திரம், ராஜபாளையம் வட்டம் மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகைஓவியம், புடைப்புச் சிற்பங்கள், மம்சாபுரம் நாயக்கர் கால மண்டபம், பிள்ளையார்நத்தம் மண்டபம் ஆகியவை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட உள்ளது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மாதாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். 10, 12ஆம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து இருக்க வேண்டும். அதேபோல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு குறைவாக இருக்க வேண்டும்.
இஸ்ரோ தலைவர் நாராயணம் இன்று நாகர்கோவில் வந்தார். அவரை இஸ்ரோ விஞ்ஞானிகள் வரவேற்றனர். பின்னர் அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசும்போது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஏவு தளத்திற்கான 90% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என்று கூறினார்.
தென்காசி மாவட்டம் மேக்கரையில் 132 அடி முழு கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 32.50அடி ,72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணை நீர்மட்டம் 25 . 92 அடி ,36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் 24 அடி , 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 54 அடி .85 முழு கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 52 அடி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த டிஎம் ட்ரேடர்ஸ், கேகே ட்ரேடர்ஸ் ஆகிய 2 நிறுவனங்கள் போலி நிறுவனங்களை உருவாக்கி அன்னிய செலாவணி வணிகத்தில் ஈடுபடுவதாக ஏமாற்றி ரூ.270 கோடி மோசடி செய்தனர். வழக்கை விசாரித்த கொல்கத்தா ED அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு சொந்தமான ராமேஸ்வரத்தில் உள்ள ரூ.30 கோடி மதிப்புள்ள தனியார் சொகுசு விடுதியின் 60 அறைகளுக்கு கொல்கத்தா அமலாக்க பிரிவு அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ்.
தூத்துக்குடி கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் ராஜேஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கூட்டுறவு ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் பாடல் போட்டி நடத்தப்படுகிறது. கூட்டுறவு பற்றி 5 நிமிடம் ஒளிபரப்ப கூடிய பாடலை இசை உடன் அமைத்து வரும் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
▶️செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், நாமக்கல்:9445852390
▶️செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், பரமத்திவேலூர்: 9445852430
▶️செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், இராசிபுரம்:9445852420
▶️செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், திருச்செங்கோடு:9445852410
▶️செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், சங்ககிரி: 9445852250
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தக்காளி காய்ச்சல் குழந்தைகளிடம் அதிகளவு காணப்படுகிறது. இதுகுறித்து பேசிய சுகாதார துறையினர் இந்த காய்ச்சல் பொதுவாக சுகாதாரம் இல்லாததால் பரவுகிறது. எப்போதும் குழந்தைகள், பெரியவர்கள் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகள் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும்போது கை, கால், முகம் கழுவுவது அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.
▶️ஆணையர், ஒட்டன்சத்திரம் நகராட்சி: 7373735856
▶️ஆணையர், திண்டுக்கல் மாநகராட்சி :9444113267
▶️ஆணையர், பழனி நகராட்சி: 7397396277
▶️ஆணையர், கொடைக்கானல் நகராட்சி: 7397396280
Sorry, no posts matched your criteria.