Tamilnadu

News April 12, 2025

மனநோய் தீர்க்கும் திருமுருகன்!

image

தற்கால சூழலில் உடல் நோய்களை விட மன நோய்களே மக்களிடையே அதிகம் உள்ளது. அப்படிப்பட்ட எவ்வித மனநோயையும் தீர்த்து வைக்கும் ஓர் ஆலயம் தான் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி ஆலயம் . இந்தக் கோயில் தீர்த்தத்தில் தினமும் குளித்து ஆறுமுகனின் ஆறாவது அதோ முகத்தை கண்டால் மனநோய் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 12, 2025

தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மாவட்ட அளவிலான  விவசாயிகள் குறைவிற்கு நாள் கூட்டம் ஏப்.17 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News April 12, 2025

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்கள், டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான (Diploma in Aari Embroidery and Hand Printing On Textiles) பெறுவதற்கு, தாட்கோ இணையதளத்தின் www.tahdco.com வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (ஏப்.12) தெரிவித்துள்ளார்.

News April 12, 2025

காஞ்சி மக்களே! அதிஷ்டம் பெருக செல்ல வேண்டிய கோவில்

image

பங்குனி மாத கடைசியான இன்று தோன்றும் பௌர்ணமி சைத்ர பூர்ணிமா எனப்படுகிறது. இன்றைய தினம் சித்ரகுப்தரை வணங்குவது வழக்கம். மேலும், இன்று அரசி, பால், தயிர், சங்கு, தண்ணீர், வெள்ளை ஆடை ஆகியவற்றை தானம் செய்தால் பல தோசங்கள் நீங்கி அதிஷ்டம் பெருகும் என்பது ஐதீகம். காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் உள்ள சித்ரகுப்தர் கோவிலுக்கு சென்றால் பல நன்மைகள் கிடைக்கும். *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தவும்*

News April 12, 2025

தமிழ்நாட்டின் முதல் உருக்காலை எங்கு இருந்தது தெரியுமா?

image

தமிழகத்தைப் பொறுத்தவரை ‘ஸ்டீல் பிளான்ட்’ என்றாலே சேலம் தான் நினைவுக்கு வரும். ஆனால் பரங்கிப்பேட்டையில் தான் முதல் இரும்பு உருக்காலை தொடங்கப்பட்டது.  ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் 1818இல் கிழக்கிந்திய கம்பெனியில் சிவில் ஊழியராக பணியாற்றிய ஜே.எம்.ஹீத் என்பவர், நான் அந்த உருக்காலையை தொடங்கினார். சிறப்பாக இயங்கி வந்த பரங்கிப்பேட்டை உருக்காலை 1867இல் மூடப்பட்டது. SHARE NOW!

News April 12, 2025

மன்னார்குடி: மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

image

மன்னார்குடியை சேர்ந்தவர் ராமன். இவர் நேற்று இரவு தனது டூவீலரில் வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் ராமர் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் இன்று காலை ருக்மணி பாளையம் சாலையில் ஒரு நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணையில் அது ராமர் என உறுதிப்படுத்தினர். இதையடுத்து விபத்தா? கொலையா? எனும் கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 12, 2025

கனிமங்கள் எடுத்து செல்ல ஆன்லைன் மூலம் அனுமதிச் சீட்டு

image

சென்னை மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் அடித்தளம் அமைக்கும் பணியில் கிடைக்கப்பெறும் மண், சக்கை கல் உள்ளிட்ட கனிமங்களை அப்புறப்படுத்துவதற்கு வரும் 28-ந் தேதி முதல் mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய சீட்டுகள் மூலம் கனிமங்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது என சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 12, 2025

8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசுத் துறையில் வேலை

image

நாகை மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவத் துறையில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நல வாழ்வு சங்கம் மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. ஆர்வம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தை தொடர்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2025

இறகு பந்து விளையாட்டு பயிற்சியாளர் பணிக்கு அழைப்பு

image

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் அரியலூர் ஸ்டார் அகாடமி பயிற்சி மையத்திற்கு இறகு பந்து விளையாட்டில் பயிற்றுனர் பணியிடத்திற்கு பயிற்சி வழங்கிட விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், 20ஆம் தேதியே இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்க நண்பர்களுகும் SHARE பண்ணுங்க…

News April 12, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் உள்ள விவேஷியஸ் அகடாமி (ம) தாட்கோ இணைந்து டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி (ம) ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில், ஆதிதிராவிடர் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!