Tamilnadu

News April 12, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.89-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று (ஏப்.12) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.96 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 12, 2025

கோவை மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு!

image

கோவை மாநகர காவல் ஆணையர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் ஆனதையொட்டி, மாநகர காவல் துறை சார்பில் பவள விழா போட்டிகள் 14-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வாக்கத்தான், கலை நிகழ்ச்சிகள், ஓவியப் போட்டி, துப்பாக்கி சுடும் போட்டி, சைக்கிளிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், பிஆர்எஸ் வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட உள்ளன என்றார்.

News April 12, 2025

இரண்டு கைகளுடன் காணப்படும் பிள்ளையார் 

image

உலகில் இரண்டு கைகளுடன் காணப்படும் விநாயகரின் சிற்பங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியிலும், மற்றொன்று ஆப்கானிஸ்தானிலும் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள விநாயகரின் சிற்பம் நின்ற கோலத்தில் அதிகமான பிற்கால அணிகலன்களுடன் காணப்படுகிறது. சிற்பத்தை வடிவமைத்த காலம் ஏறக்குறைய கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என வரலாற்று குறிப்புகளில் இடம் பெற்றுள்ளது. Share It.

News April 12, 2025

கோவை நட்சத்திர ஓட்டலில் IPL சூதாட்டம் 

image

கோவை, காட்டூர் போலீசாருக்கு ஐ.பி.எல் சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, காந்திபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சோதனை செய்ததில், ஒரு அறையில் இருந்த இளைஞர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதால், தீவிர சோதனையிட்டனர். அதில் ரூ.1  கோடியே 9 லட்சத்து 90,000 ரொக்கம் சிக்கியது. விசாரணையில் வாலிபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்பு கொண்டனர். போலிசார் அவர்களை கைது செய்தனர்.

News April 12, 2025

காஞ்சி மாவட்டத்தின் புள்ளி விவரம் தெரிய வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மக்கள்தொகை, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, விவசாயம், சமூக நலத்திட்டங்கள் பற்றி விரிவாக தெரியவேண்டுமா?. அரசு உதவிகளை பெறும் வழிமுறைகள், விவசாய நிலங்கள், பயிர்கள், தொழில் வாய்ப்புகள், சுற்றுலா இடங்கள் போன்றவை பற்றியும் தெரியவேண்டுமா? அப்படியென்றால் <>இதை கிளிக் செய்யுங்கள்<<>>. அதில் வரும் PDF-ஐ டவுன்லோட் செய்யுங்கள் கண்டிப்பாக பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள். *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தவும்*

News April 12, 2025

திருவள்ளூர் மாவட்ட சத்துணவு மையத்தில் வேலை வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> ஏப்.29-க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். *அரசு வேலைன்னா சும்மாவா!! தெரிந்த 18-40 வயது பெண்களுக்கு பகிரவும்*

News April 12, 2025

தோஷம் நீக்கும் பக்தஜனேஸ்வரர் கோயில்

image

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி இன்று. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரில் உள்ளது பக்தஜனேஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் சிவன் சுயம்புவாக காட்சி தரும் நிலையில், இங்கு வந்து வழிபட்டால் எத்தகைய தோஷமாயினும் அது எளிதில் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க…

News April 12, 2025

திருமண வரம் தரும் மயூரநாதர் கோயில்

image

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி இன்று. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பனப்பாக்கத்தில் அமைந்துள்ளது மயூரநாதர் கோயில். அகத்தியருக்கு கைலாய மலையில் இருந்து சிவன் திருமண காட்சியை அருளிய தலம் என்பதால், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து மயூரநாதரை வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. திருமண வரன் பார்த்துக்கொண்டிருக்கும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க..

News April 12, 2025

தருமபுரி மாவட்டத்தில் 135 பணியிடங்கள் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்படும் என ஆட்சியர் சதிஷ் தகவல் தெரிவித்துள்ளார். *செம வாய்ப்பு. தெரிந்த பெண்களுக்கு பகிரவும்*

News April 12, 2025

திருப்பூர்: திடீர் மின்தடையா ? உடனே இதுக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

error: Content is protected !!