India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரைக்குடியை சேர்ந்தவர் லிங்கம். அவரது மனைவி பானுமதி மகள் விஷாலினி 9 சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சிறுமியை வளர்ப்பதில் சிரமம் என நினைத்த தம்பதியினர் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு, மகளுக்கும் கொடுத்தனர்.பின் உறவினருக்கு விஷம் அருந்தியதை தெரிவித்தனர். உறவினர்கள், மூவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சிறுமி பலியானார். லிங்கம், அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பெரிய ஏரியூர் கொல்லைமேட்டில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று, பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு 108 பால் குட ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சாமியாடிய நபர் ஒருவர் வினோதமாக மரத்தில் ஏறியும், மரம் விட்டு மரம் தாவியும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். காப்பு கட்டிய ஏராளமான பெண்களும் அருள் வந்து கொளுத்தும் வெயிலிலும் சாமியாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும். நாளை முதல் 18ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
திருப்பூர், மூலனூர் அருகே உள்ள கரைப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (55). இவர் நேற்று காலை பெரமியத்தில் உள்ள, ஒருவரின் தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரங்களில், தேங்காய் வெட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது தென்னை மரத்தின் அருகில் சென்ற மின்சார கம்பியில், கொக்கி உரசியுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ராமசாமி, பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரியகுளம் அருகே வடுகபட்டியை சேர்ந்தவர் சுந்தரம் 57. இவரது மனைவி தோட்டத்திற்கு சென்றிருந்த நிலையில், சுந்தரம் கடைக்கு செல்வதற்கு வீட்டின் வெளியே பூட்டிவிட்டு, சாவியை முன்பக்க குளியலறையில் வைத்து விட்டு சென்றார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு சுந்தரம் வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன் பக்கம் கதவு திறக்கப்பட்டு, பீரோவிலிருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான 12 பவுன் தங்கநகைகள் திருடுபோனது. தென்கரை எஸ்.ஐ. விசாரணை
▶ செங்காடு யோக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு ▶புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு ▶செம்பாக்கம் பால திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ▶அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் பள்ளியறை பூஜை ▶பெரும்பேர் கண்டிகை தாந்தோன்றீஸ்வரர் கோவிலில் நைவேத்திய பூஜை ▶சோத்துப்பாக்கம் பாலமுருகன் கோவிலில் மண்டலாபிஷேகம் ▶நந்திவரம் விநாயகர் கோவிலில் நித்திய பூஜை
வேடல் கிராமம் பெரியார் நகரில் அரக்கோணம் – சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இறந்தவர் யார் என அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
தென்காசி, வீரகேரளம்புதூரில் சிற்றாறில் சாமி கும்பிட கோவில்பட்டியை சேர்ந்த முத்துராஜ் என்பவர் குடும்பத்துடன் வந்துள்ளார். அவர் நேற்று (ஏப்-12) சிற்றாறில் குளிக்கும் போது பாறையில் தவறி விழுந்து பலியானார். காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சுரண்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
ஒட்டன்சத்திரம் நாகணம்பட்டி ஏ.பி. காலனியை சேர்ந்த மோகன்ராஜ் மனைவி சரோஜாவும் (43), மகள் கீர்த்தனாவும் (9), காமாட்சி அம்மன் கோயில் முன்பு நேற்று முன் தினம் இரவு நடந்து சென்றனர். அப்போது சிவகங்கையை நோக்கி சென்ற கார் நடந்து சென்ற சரோஜா மற்றும் கீர்த்தனா ஆகிய இருவர் மீதும் மோதியது. இதில் தாய் சரோஜா உயிரிழந்தார், கீர்த்தனா சிகிச்சையில் உள்ளார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன்(65). சித்த மருத்துவரான இவரை, திருமணம் செய்துகொள்வதாகச் கூறி, நகைகள் வாங்கி ஏமாற்றிய வழக்கில் 57 வயதான கீதா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் இதே மாதிரியான மோசடிகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் நகைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து, கீதாவை சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.