Tamilnadu

News August 7, 2025

புதுக்கோட்டை இரவு ரோந்து பணி போலீசார் விபரம்  

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டு எண்ணை தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கு உதவும் வகையில், ஷேர் செய்யுங்கள்!

News August 7, 2025

ஈரோடு: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

image

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த புகாரின் அடிப்படையில் ஈரோடு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சித்தோடு சாணார்பாளையத்தை சேர்ந்த சூர்யா (25) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட சூர்யாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

News August 7, 2025

பட்டய பயிற்சி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

image

திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025- 2026ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பத்திற்கான காலம் 22.08.2025 வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயிற்சியில் சேர்க்கை செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவங்கும் நாள் 25.08.2005 ஆகும். மேலும் விபரங்களுக்கு 0451-4056597 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

News August 7, 2025

பெரம்பலூர்: திருக்குறள் பயிற்சி வகுப்பு அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் லாடபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியிலும், பாடாலூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், (9.8.2025) முதல் வாரந்தோறும் சனிக்கிழமையில் நடைபெறவுள்ளது. முற்பகல் 10 மணி முதல் 12.30 மணி வரை 30 வாரங்கள் நடைபெற உள்ளதால் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், மணலூர்பேட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய வட்டாரங்களில் பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்கலாம். வருமானச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உட்பட 13 துறைகளைச் சார்ந்த 43 வகையான சேவைகளை மக்கள் பெறலாம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

News August 7, 2025

சேலம்: இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலம் ஆகஸ்ட் 7 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️எடப்பாடி நடராஜர் திருமண மண்டபம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் எடப்பாடி.
▶️இளம்பிள்ளை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் கல்யாண மண்டபம் சந்தைப்பேட்டை.
▶️ வீரபாண்டி ஸ்ரீ கிருஷ்ணா மஹால் நெய்க்காரப்பட்டி. ▶️அயோத்தியாபட்டினம் வைஷ்ணவி திருமண மண்டபம் மின்னாம்பள்ளி. ▶️ ஓமலூர் அருள் மஹால் திருமண மண்டபம், ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

News August 7, 2025

கரூர்: கஞ்சா விற்பனை குறித்து புகார் அளிக்கலாம்!

image

கரூர் நகர காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தால் சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரேனும் கஞ்சா போதை பொருட்களை விற்றாலோ, வைத்திருந்தாலோ, கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு தகவல் தருமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் காவல் துறை ஆய்வாளர் 99429-04717 சார்பு ஆய்வாளர் 94981-61773 ஆகிய எண்களில் புகார் கொள்ளலாம்.

News August 7, 2025

செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், மறைமலைநகர், சித்தாமூர், திருக்கழுக்குன்றம், செயின்ட் தாமஸ் மவுண்ட், மதுராந்தகம் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற அரசின் சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து 45 நாட்களில் தீர்வு பெறலாம். ஷேர் பண்ணுங்க.

News August 7, 2025

விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நேற்று (ஆக.06) நடைபெற்றது. உடன் உதவி ஆணையர்(கலால்) ராஜு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகன், உதவி இயக்குநர் (திறன் பயிற்சிகள்) சிவசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

News August 7, 2025

நம்மாழ்வார் விருது பேர் தென்காசி விவசாயிகளுக்கு அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் https:/www.tnagrisnet.tn.gov.in/ என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். நம்மாழ்வார் விருது பெற விரும்பும் உயிர்ம விவசாயிகள் வலைதளத்தில் பதிவு செய்ய 15.09.2025-ம் தேதிக்குள் பதிவுக்கட்டணம் ரூ.100/- செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!