India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (16-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த (ஏப்ரல் 9) முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து எட்டு நாட்களாக முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக விஸ்வேஸ்வர சுவாமி வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் நாளை (17.04.25) நடைபெற உள்ளது. இதனையொட்டி நம்பெருமாள் அதிகாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தடைகிறார். அதனைத் தொடர்ந்து காலை 4:30 மணி முதல் 5:30 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 16-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர், ராயனூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த வழக்கில் கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நிஷாந்த், அரவிந்த் ஆகியோர்களுக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும், வசந்தகுமார், கலைவாணன், கோகுல்நாத், பார்த்திபன் ஆகியோர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதத்துடன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கலந்தாய்வுக் கூட்டம் இன்று (ஏப்.16) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் மற்றும் பல அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
வாட்ஸ்அப் மூலம் மோசடி நடைபெறுவதாக ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடி நபர்கள், போலி வாட்ஸ்அப் அழைப்புகள், செய்திகள் மூலம் பயனர்களிடம் இருந்து பணம் பறிப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும், பயனர்கள் தங்கள் OTP, தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சைபர் குற்றங்களை புகாரளிக்க 1930 (24×7) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
தி.மலை, சோமாசிபாடி மலையில் ‘பவர்புல்’ முருகன் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் குளத்தில் கிருத்திகையில் மட்டுமே பூக்கும் செங்கழுநீர்ப் பூ, முருகனுக்கு சாத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே மறைந்து போவது, கலியுகத்தின் அதியம். இங்கு, செவ்வாய்கிழமைகளில் 6 தீபங்கள் ஏற்றினால் கல்வியில் சிறந்து விளங்கலாம், நல்ல வேலை, பதவி உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. *நண்பர்களுக்கு பகிரவும்*
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும்.அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் தஞ்சை சரக காவல்துறை டி.ஐ.ஜி கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து 24 மனுக்களை பெற்றுக் பெற்றுக்கொண்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருன்கரட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.