Tamilnadu

News August 7, 2025

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாரத்தான் போட்டி

image

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக “DRUG FREE TN” என போதை பொருட்கள் ஒழிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், வரும் ஆகஸ்ட் 9 காலை 5:30 மணியளவில் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் தொடங்கி நேதாஜி ஸ்டேடியம் வரை மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இதில் 15 வயது முதல் 30 வயது வரை ஆண்/பெண், 30 வயதிற்கு மேற்பட்டவருக்கான ஆண்/பெண் என 2 பிரிவுகளில் நடைபெற உள்ளது என எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

செங்கல்பட்டுக்கு கனமழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாளை (ஆகஸ்ட் 8) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News August 7, 2025

ராணிப்பேட்டைக்கு கனமழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாளை (ஆகஸ்ட் 8) ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News August 7, 2025

அரியலூர் கூட்டுறவு வங்கியில் ரூ.96,395 சம்பளத்தில் வேலை!

image

அரியலூர் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 28 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு மாதம் ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வருகிற ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 7, 2025

தேனி இன்னைக்கு இதெல்லாம் நடக்குதா? தெரிஞ்சுக்கோங்க!

image

தேனி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 7, 2025) பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் உட்பட பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கின்றன. ஹரே ராம நாம கீர்த்தனம் பெரியகுளத்தில் நடைபெற உள்ளது. கனரா வங்கி சார்பாக இலவச பயிற்சி முகாம் மற்றும் தேனி கம்மவார் கல்லூரியில் போட்டித்தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகியவை இன்று நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க!

News August 7, 2025

நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நல அலுவலரை (04365-243045) அணுகவும். SHARE பண்ணுங்க!

News August 7, 2025

இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு சங்க உதவியாளர் வேலை

image

இராமநாதபுரம் கூட்டுறவு துறையின் இயங்கும் சங்கங்கள் (ம) வங்கிகளில் உள்ள உதவியாளர்/ இளநிலை உதவியாளர் 32 பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, (ஆகஸ்ட் 6) முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. மாவட்ட கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் நடைபெறும். இதனை www.drbramnad.net என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News August 7, 2025

தென்காசியில் போக்குவரத்து மாற்றம்!

image

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு (ஆகஸ்ட்.07) இன்று போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் சங்கரன்கோவில் நகர பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. திருநெல்வேலி, ராஜபாளையம், கோவில்பட்டி, தென்காசி போன்ற ஊர்களிலிருந்து வரும் பேருந்துகளுக்கு மாற்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தபட்டுள்ளன. SHARE பண்ணுங்க.

News August 7, 2025

தஞ்சை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலரை (04362-231024) அணுகவும். SHARE பண்ணுங்க!

News August 7, 2025

கரூர்: டிகிரி போதும் வங்கியில் வேலை!

image

கரூர் மக்களே, மிழ்நாடு இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே (ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

error: Content is protected !!