India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆவடி காவல் ஆணையரக இணையவழி குற்றப்பிரிவு போலீசாரால் 40 வழக்குகளில் மீட்கப்பட்ட 70 லட்சம் ரூபாய் பணத்தை ஆவடியில் உள்ள ஆவடி காவல் ஆணையராகத்தில் காவல் ஆணையாளர் கி.சங்கர் நேரில் உரியவர்களிடம் வழங்கினார். இணைய வழி பணப்பரிவர்தனைகளில் எப்போதும் விழிப்போடு இருங்கள். புகார்களுக்கு 1930 ஐ தொடர்பு கொள்ளவும்.
திருவண்ணாமலையை சேர்ந்த மோனிஷா (26), மோகன்ராஜ் (27) ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து 2023ல் கடலூரில் பதிவு திருமணம் செய்துகொண்டனர். சமீபமாக மோகன்ராஜ் சரியாக பேசவில்லை எனக்கூறி, ஜூலை 27ல் அவர் வீட்டில் கேட்டபோது மோனிஷாவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து (ஆகஸ்ட்-07) விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (ஆகஸ்ட்-7) வெளியிடப்பட்ட விலை நிலவரப் பட்டியலின்படி, எள் அதிகபட்சமாக ரூ.8,680-க்கும், மக்காச்சோளம் ரூ.2,529-க்கும், மணிலா அதிகபட்சமாக ரூ.8,420-க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.
பரமக்குடி சுந்தரராஜ பவனத்தில் பரமக்குடி நகராட்சி 14,15 வார்டுகள், மண்டபம், பேரூராட்சி திருமண மண்டபத்தில் 10 – 18 வார்டுகள், மேலப்பார்த்திபனூர், சமுதாயக்கூடம், நம்பதாளை புயல் காப்பகம், பாண்டியூர் சமுதாயக்கூடம், பெரியபட்டிணம் சமுதாயக்கூடம், ஆகிய இடங்களில்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (ஆக. 8) நடைபெற உள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வட்டாரத்தில் கோளிவாக்கம், புஞ்சையரசந்தாங்கல், சித்தேரிமேடு, திருப்பருத்திகுன்றம். வாலாஜாபாத் வட்டாரத்தில் தண்டலம், நெல்வாய், களியனுார் உள்ளிட்ட இடங்களில் நாளை(ஆகஸ்ட். 8) காலை 10:00 மணிக்கு, ‘உழவரை தேடி வேளாண்’ உழவர் நலத்துறை திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்களில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்று பயன் பெறலாம் என காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு ஏஐடியுசி அகில இந்திய தலைவர் சங்கர் பேட்டியளித்தார். மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலணிகள், கையுறை, ரெயின் கோட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி வரும் ஆகஸ்ட் 13ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி (ம) உற்பத்தியை அதிகரித்தல் திட்டத்தின் கீழ் முகையூர், காணை, வல்லம், மரக்காணம் திருவெண்ணைநல்லூர் வட்டாரங்களில் 100 ஹெக்டேர் பரப்பளவில் மானியம் பெற்று மக்காச்சோளம் செயல் விளக்க திடல் அமைக்க விவசாயிகள் உழவர் செயலி மூலம் முன்பதிவு செய்தோ அல்லது நில ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுக விழுப்புரம் வேளாண் இணை இயக்குனர் அறிவித்துள்ளார்
குண்டூர், திருப்பதி, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் திருச்சி, மதுரை வழியாக இயங்கும் வண்டி எண்: 07229/30 கன்னியாகுமரி – ஹைதராபாத் வாரந்திர சிறப்பு ரயில் 10.10.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் இன்று (ஆக.7) தெரிவித்துள்ளனர். இது ரயில் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வரும் 9-ம் தேதி, பாப்பாக்குறிச்சி அருகில் உள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களது பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் -2, ஆதார் நகல் மற்றும் தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் சிறை கைதி மணிகண்டனை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பின்பு சிறையின் நுழைவாயிலில் மணிகண்டன் மீது மெட்டல்டிடெக்டர் கருவி கொண்டு சோதித்தனர். அப்போது அவர் ஆசன வாயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது பின்னர் இனிமா கொடுத்து வெளியே எடுத்தனர். மேலும், அஸ்தம்பட்டி காவல் துறையின் விசாரணை நடத்தினர்
Sorry, no posts matched your criteria.