Tamilnadu

News April 17, 2025

அமைச்சர் பொன்முடி மீது காவல் நிலையத்தில் புகார்

image

இந்து மதம் தொடர்பான வனத்துறை அமைச்சர் பொன்முடி பேச்சை கண்டித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கவிதா ஸ்ரீகாந்த்  தலைமையில் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இருந்தனர்.

News April 17, 2025

கூடைப்பந்து பயிற்றுநருக்கான வேலைக்கு பயிற்சி 

image

சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கத்தில் கூடைப்பந்து பயிற்றுநருக்கான வேலைக்கு பயிற்சி பெற வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வழங்கிட கூடைப்பந்து விளையாட்டில் சான்றிதழ் பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கணைகள் வருகின்ற 24.04.2025 அன்று சிவகங்கை விளையாட்டரங்கிற்கு நேரில் தேர்வுக்கு வருகை தர வேண்டும் என சிவகங்கை மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

தஞ்சை: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து கொள்முதல்

image

தஞ்சை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக நடப்பு 2025-26-ம் ஆண்டில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பச்சைப்பயறு நன்கு சுத்தம் செய்து எடுத்துவர வேண்டும். ஈரப்பதம் 12% க்குள் இருக்குமாறு உலர வைத்து, மற்ற பொருட்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 17, 2025

விளையாட்டுப் பிரிவில் கொடைக்கால பயிற்சி முகாம்

image

திருவாரூர் மாவட்ட விளையாட்டுப்பிரிவால், 2025 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள்,மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோருக்கு திருவாரூர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் எதிர்வரும் 25 முதல் 15.05.2025 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

பெரம்பலூர்: வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 10 அங்கன்வாடி மையம் மற்றும் 5 நடுநிலைப் பள்ளிகளுக்கு (ICDS) சரியான உணவு உண்ணும் வளாகம் ,அற்று, பள்ளிஎன்ற சாண்றிதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை புதுதில்லியில் உள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் மூலம்  வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துகள் தெரிவித்தார்.

News April 17, 2025

சேலத்தில் இலவச கடிகார பழுதுநீக்கும் பயிற்சி

image

சேலம் அரசு ஐடிஐயில், கடிகார பழுதுநீக்கம் தொடர்பான 3 மாத குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான சேர்க்கை நடக்கிறது. இதில் சேர விருப்பம் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நாளை ஏப்ரல் 18-ம் தேதிக்குள் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயிற்சி பெற்று பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

மயிலாடுதுறையில் கட்டுரை, பேச்சுப் போட்டி, ஆட்சியர் அழைப்பு

image

மயிலாடுதுறை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சி சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 9ஆம் தேதி நடைபெற உள்ளது. பிளஸ் 1 & பிளஸ் 2 மாணவர்களுக்கு தியாகி நாராயணசாமி நகராட்சி பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு ஞானாம்பிகை கல்லூரியிலும் காலை 9 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 17, 2025

1052 பேருக்கு பல்வேறு வகையான தொழில் மேம்பாட்டு பயிற்சி ஆட்சியர் தகவல்

image

நிறைந்தது மனம் நிகழ்ச்சியில், திருவாரூில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 2024-2025ஆம் ஆண்டில் 1052 பேருக்கு பல்வேறு வகையான தொழில் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அதில் 754 பேர் சுயத்தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் 377 பேருக்கு வங்கி கடன் உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 17, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது

image

அச்சிறுப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், செங்கல்பட்டு மாவட்ட சிறந்த பள்ளிக்கான காமராஜர்விருது, பாராட்டுசான்று வழங்கும்விழா (ம) 8-கூடுதல் பள்ளிகட்டிடங்கள் திறப்புவிழா நிகழ்ச்சி இன்றுகாலை மாவட்ட ஆட்சியர் S.அருண்ராஜ், கூடுதல் ஆட்சியர் நாராயணசர்மா (மா.ஊரகவளர்ச்சி) தலைமையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் S.C.அகர்வால், CMD.மைத்தன் நிறுவன மேலாளர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,

News April 17, 2025

மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு 

image

நாளை (ஏப்ரல் 18) புனித வெள்ளி விடுமுறை நாள் ஆகும். இதனை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலை 8 முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8 மணி வரை 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் எனவும், மற்ற நேரத்தில் 7 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!