Tamilnadu

News April 18, 2025

சேலம்: பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை!

image

சேலம் நாராயண நகரில் 3-வது கிராஸ் பகுதியில் இன்று (ஏப்ரல் 18) பட்டப்பகலில் வீட்டில் புகுந்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த வயதான தம்பதியை மிரட்டி 7 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட்டியுள்ளனர். இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற அம்மாப்பேட்டை காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 18, 2025

“நாளை என்பதே இல்லை” கோவையில் அற்புத கோயில்!

image

கோவை, நரசிம்மநாயக்கன் பாளையத்தில், கடந்த 300 ஆண்டு காலமாக லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இங்கு பக்தர்கள் வைத்திடும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுவதால், ‘‘நாளை என்பதே நரசிம்மப் பெருமாளிடம் இல்லை’’ என்கிறார்கள் இறையருளை உணர்ந்தவர்கள். மேலும், ராகு, கேது தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்தும், மஞ்சள் காப்பிட்டும் வேண்டிக் கொள்கின்றனர். SHARE பண்ணுங்க!

News April 18, 2025

மதுரையில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 18) 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 18, 2025

தென்காசி : கடவுளின் தலைவலியை போக்கும் தைலம்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலநாதர் கோயில் சைவ சமய பெரியோர், நாயன்மார்களால் பாடல் பெற்ற பழமை வாய்ந்த கோயில் ஆகும். இக்கோயிலில் மூலவர் குற்றாலநாத சுவாமிக்கு ஏற்படும் தலைபாரத்தை நீக்க ஒவ்வொரு ஆண்டும் 48 மூலிகைகளால் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் காய்ச்சப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தைலம் விற்பனை செய்யப்படுவதால் ஏராளமான மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

News April 18, 2025

ஆயுள் பலம் தரும் ராசிபுரம் கோயில்!

image

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள். திருமண தடை, தம்பதிக்கு இடையே பிரச்னைகள் நீங்க, வாழ்க்கை துணைவருக்கு ஆயுள் பலம் நீடிக்க, குடும்பத்துடன் ஒருமுறை நித்ய சுமங்கலி மாரியம்மனை தரிசித்து வழிபட்டால், நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும், விரும்பியது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!

News April 18, 2025

புதுச்சேரி: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

image

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் <>rrbchennai.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

News April 18, 2025

தேனி : உள்ளூரிலேயே வேலை வேண்டுமா?

image

தேனி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25.04.2025 அன்று காலை10 மணி முதல் 5.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ ஆகிய கல்வித் தகுதி உடையோர் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள <>இங்கு கிளிக்<<>> செய்தோ, 7695973923 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

News April 18, 2025

களவு பொருளை கை சேர்க்கும் கருப்பர்

image

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பிரசித்தி பெற்ற வண்டிக் கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கருப்பணசாமி வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் களவு போன பொருள் மீண்டும் கிடைக்கும், நினைத்த காரியம் கைகூடும், பில்லி சூனியம் அகலும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News April 18, 2025

ராமர் பாலம் அருகே சுற்றுலா படகு சேவை – இலங்கை அரசு திட்டம் 

image

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே உள்ள ராமர் பாலம் பகுதியில் சுற்றுலா படகு சவாரியை தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கு பயணிகள் சேவை தொடங்கப்படும் என்று இலங்கை அதிபர் அநுர குமார் இன்று (ஏப்.18) அறிவித்துள்ளார்.மேலும் சுற்றுலா பயன்பாட்டிற்கு மணல் திட்டுகளை தனியார் பயன்படுத்தி கொள்ளவும் இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது பற்றி உங்க கருத்து.Comment,Share.

News April 18, 2025

வேலூர் : செல்லப்பிராணிக்கு அஞ்சலி செலுத்தும் குடும்பம் 

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் வீட்டில் செல்ல பிராணியாக டாமி என்ற நாய் வளர்த்து வந்துள்ளார். நாயானது உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது. அதன் நினைவாக வருடந்தோறும் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று வீட்டில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

error: Content is protected !!