Tamilnadu

News August 10, 2025

பாடியநல்லூர் மருத்துவ முகாமில் அமைச்சர் பங்கேற்பு

image

பாடியநல்லூர் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் நலவாழ்வு துறை சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தமிழக நலத்துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு, மார்பகப் புற்றுநோய் பரிசோதனை, இலவச கண் பரிசோதனை, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உதவிகளை துவக்கி வைத்தார். இந்த முகாமில் நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர்.

News August 10, 2025

மகளிர் சுய குழுக்களின் வாரசந்தை

image

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் குழுக்களின் இயற்கை சந்தை இன்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை பொட்டல் புதூர் பொன் நகர் அருகே வார சந்தையில் நடைபெறுகிறது. இதில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாட்டு காய்கறிகள் கீரை வகைகள் பழங்கள் அரிசி சிறுதானிய உணவுகள் தானியங்கள் செக்கு எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

News August 10, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால் 1930 என்ற உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் செய்யவும். உங்கள் பணம் மோசடி நபர்களிடமிருந்து மீட்டு தரப்படும். வேறு வகையான சைபர் குற்றத்திற்கு புகார் செய்ய <>www.cybercrime.gov.in<<>> என்ற இணையத்தில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. யாரோ ஒருவருக்கு உதவும்!

News August 10, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான 45 நாட்கள் இலவச சிறப்புப் பயிற்சிக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தகுதியானவர்கள். பயிற்சி காலத்தில் இலவச தங்குமிடம், உணவுடன், மாதம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை சம்பளத்துடன் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.

News August 10, 2025

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது .தெரியாத WhatsApp மற்றும் Telegram செயலிகளின் குழுக்கள் மூலம் போலியான ஆன்லைன் டிரேடிங் முறையில் பணத்தை செலுத்தி ஏமாராதீர்கள்!! (ஆகஸ்ட்-09) நேற்று அந்த வகையில் விழுப்புணர்வு புகைப்படத்தை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News August 10, 2025

ராணிப்பேட்டை: வேலை வாய்ப்பு அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்க துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூட்டுறவுத்துறையில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பதினைந்து இடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது http://drbrpt.in என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 29 தேதி வரை உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நண்பர்களுக்கு பகிரவும்.

News August 10, 2025

நாமக்கல் : முட்டை விலை 5 பைசா உயர்வு!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 9) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 465 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.

News August 10, 2025

மதுராந்தகம் அருகே போலி மருத்துவர் கைது

image

மதுராந்தகம் அருகே மேலவளம்பேட்டையில் மருத்துவம் படிக்காமல் பிரகாஷ் என்பவர் மருத்துவராகப் பணியாற்றுவதாகக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, மருத்துவப் பணிகள் இயக்குநர் மலர்விழி, மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரகாஷின் ஆவணங்களை ஆய்வு செய்ததில், அவை போலியானவை எனத் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் பிரகாஷைக் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

News August 10, 2025

பாலியல் தொழில் நடத்தி வந்த 3 பேர் கைது

image

திருப்பூர் பாளையக்காடு பகுதியில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது வாடகை வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சேக் முகமது என்கிற சலீம் (30), விக்னேஷ் (23) மற்றும் பன்னீர்செல்வம் (35) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

News August 10, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை முக்கிய அறிவிப்பு.

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் புதிய மதுவிலக்கு அமலாக்க தடுப்புச்சட்டத்தின் படி சாராயம் காய்ச்சுவது,கடத்துவது, விற்பனை செய்வது,
சாராயம் காய்ச்ச தேவையான (வெல்லம், சர்க்கரை முதலிய) பொருட்களை பதுக்கி வைப்பது மிகப்பெரிய குற்றம், இதற்கு 7ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.3லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும், மேற்படி குற்ற செயல்கள் பற்றி தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் 10581 அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!