Tamilnadu

News April 22, 2025

கோடை மழையை பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் அறிவுரை

image

நாமக்கல் மாவட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம் பங்குனி சித்திரை வைகாசி மாதங்களில் பெய்யும் மழையினை கோடை மழை என்று அழைக்கிறோம் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அனைவரும் தற்போது பெய்துள்ள கோடை மழையினைக் கொண்டு கோடை உழவு செய்து மழைநீர் சேகரிப்பு களைக்கட்டுப்பாடு பூச்சி நோய் மேலாண்மை ஆகிய தொழில் நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்

News April 22, 2025

ஏப்.25-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

image

சேலம் மாவட்டத்தில் ஏப்ரல் 2025 மாதாந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25-ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215-ல் நடைபெற உள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 22, 2025

அய்யர்மலை சித்திரை திருவிழாவுக்கு வாங்க

image

குளித்தலை வட்டம் அய்யர்மலையில் அமைந்துள்ள ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா ▶️ மே.1ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது ▶️ மே.5 சுவாமி திருக்கல்யாணம் ▶️ மே.8 சுவாமி குதிரை தேர் ▶️ மே.9 திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி ▶️ மே.14 இரவு மஞ்சள் நீராட்டு விழா சுவாமி குதிரை வாகனம் நடைபெறவுள்ளது. இதனை மற்ற பக்தர்களுக்கும் பகிருங்கள்.

News April 22, 2025

கோடைகால பயிற்சி முகாம்: கலெக்டர்

image

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், வரும் ஏப்ரல் 25 முதல் மே 15ஆம் தேதி வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் 25ஆம் தேதி காலை 6 மணியளவில் நேரிலோ அல்லது 7401703483 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்

News April 22, 2025

திருவள்ளூர் ரயில் தடம் புரண்டது

image

சென்னை ராயபுரம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலின் 3ஆவது பெட்டியின் சக்கரங்கள் தடம் புரண்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் பாதையில் இருந்து இறங்கிய ரயில் பெட்டியை மீண்டும் ரயில் பாதையில் ஏற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 22, 2025

ராயபுரத்தில் ரயில் தடம் புரண்டது

image

சென்னை ராயபுரம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலின் 3ஆவது பெட்டியின் சக்கரங்கள் தடம் புரண்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் பாதையில் இருந்து இறங்கிய ரயில் பெட்டியை மீண்டும் ரயில் பாதையில் ஏற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 22, 2025

நாமக்கல்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 144 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

News April 22, 2025

திண்டுக்கல்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 235 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

News April 22, 2025

மயிலாடுதுறை: அம்மன் உருவம் பொறித்த அஞ்சல் தலை 

image

கொள்ளிடம் பகுதியில் புகழ்பெற்ற புலீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. 108 அம்மன் கோயில்களில் 18வது சத்தி ஸ்தலமாக இக்கோயில் திகழ்கிறது. இங்குள்ள புலீஸ்வரி அம்மன் புலியின் மீது அமர்ந்துள்ள உருவப்படத்தை அஞ்சல் தலை மூலம் வெளியிட அஞ்சல் துறைக்கு கொள்ளிடம் சமூக சேவகர் பிரபு விண்ணப்பித்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று அஞ்சல் துறை மூலம் புலீஸ்வரி அம்மன் உருவப்படம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

News April 22, 2025

திருப்பூர்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 43 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை <>www.icds.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!